சென்னை: தலவலிக்கு மருந்து கேட்ட மனைவியை வாலிபர் விவாகரத்து செய்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி கூறப்படுவதாவது, சென்னை சினிமா பேட்டை, பைத்தியகார தெருவை சேர்ந்தவர் குமார் . தீவிர அஜித் ரசிகரான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த குமாரிக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. அஜித்தின் சமிபத்திய படமான வேதாளம் படத்தை பலமுறை கணவருடன் பார்த்ததால், குமாரிக்கு தலைவலி ஏற்பட்டது. இதனால் கணவரிடம் டைகர் பாம்
வாங்கிவர சொல்லியிருக்கிறார். இதை கேட்ட குமார், என்கிட்டேயே டைகர் (புலி) பத்தி பேசுறியே, அப்ப நீ விஜயோட ரசிகையாதான் இருக்கணும். இனிமே உனக்கும் எனக்கும் ஒத்து வராது என்று கூறி குமாரியை விவாகரத்து செய்வதாக சொல்லிவிட்டார்.


இது பற்றி குமாரியின் உறவினர் ஒருவர் கூறியதாவது, மாப்பிளைக்கு அஜீத்னா உயிர், ஆனா எங்க பொண்ணுக்கு அஜித்
விஜய் ரெண்டு பேருமே ரெண்டு கண்கள் மாதிரி. இத நாங்க சும்மா விட மாட்டோம் என்று படபடத்தார்.
விஜய் ரெண்டு பேருமே ரெண்டு கண்கள் மாதிரி. இத நாங்க சும்மா விட மாட்டோம் என்று படபடத்தார்.
There are no comments yet
Or use one of these social networks