சென்னை: தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் நேற்று சட்டசபையில் டாஸ்மாக் குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அப்போது பேசும் போது அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் கூறியதாவது. தற்போது தமிழகத்தில், எல்லோர் வீடுகளிலும் டாஸ்மாக் ஒரு அத்தியாவசிய அங்கமாகி விட்டது, இது தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை. இந்த பெருமையை தந்த செம்பரம்பாக்கம் தாய்க்கு தமிழ் நாடே கடமைப் பட்டிருக்கிறது.
மேலும் டாஸ்மாக் குடிமகன்களின் அன்றாட குறைகளை உடனே களைவதற்கு ‘சும்மா அழைப்பு மையம்’ என்ற 24 மணி நேர கால் சென்டர் ஒன்றையும் அரசு அமைக்கவிருக்கிறது. இந்த மையத்தில் ‘000’ என்ற நம்பருக்கு குடிமகன்கள் எந்நேரமும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு இருக்கும் டாஸ்மாக் அல்லது மது குறித்த எந்த சந்தேகத்தையும் கேட்கலாம். எடுத்துக்காட்டாக எந்த சரக்குக்கு எந்த சைடு டிஷ் சரியாக இருக்கும், புதிதாக குடிப்பவர்களுக்கு ‘மிக்ஸிங் டெக்னிக்’ போன்றவை பற்றி கேட்கலாம். ‘சும்மா அழைப்பு மையத்தின்’ மூலம் சுமார் 250 கழக கண்மணிகளுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும் வேலை கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.
There are no comments yet
Or use one of these social networks