புது டெல்லி: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பல்கலையில் மாணவர் ரோஹித் வெமுலா, என்று யாரும் கிடைத்து. அனைத்தும் மாயை என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
தெலுங்கானாவில், ஐதராபாத் பல்கலையில், படித்து வந்த, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த, ரோஹித் வெமுலா என்ற மாணவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இது தொடர்பாக, பல்கலையில், மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தபோது, விடுதியில் உள்ள நண்பர் அறையில், ரோஹித் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சரும், பாஜக-வின் . மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: எனக்கு கிடைத்த தகவல்படி, தற்கொலை செய்த மாணவர் ரோஹித், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. உண்மையில் ரோஹித் வெமுலா என்ற பெயரில் யாருமே இருந்த மாதிரி தெரியவில்லை. எல்லாம் ஒரு மாயை. அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றுகின்றன என்றார்.
There are no comments yet
Or use one of these social networks