சென்னை மாநகராட்சி 33-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டி? – அதிமுக சார்பில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிபாரிசு

360

சென்னை: சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட கோரிக்கை விடுத்தார். இது குறித்த ஆலோசனை இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது ‘ராகுல்தான் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். அவரை தமிழ் நாட்டு அரசியலுக்கு தயார் செய்யும் பொறுப்பை குஷ்புவிடம் ஒப்படைத்துள்ளேன்’ என்றார்.

அருகிலிருந்த குஷ்பு கூறும்போது, ‘ராகுல் சென்னையில் போட்டியிடுவது ரெம்ப த்ரில்லிங் ஆக உள்ளது. அவருக்கு இங்க நல்ல நேம் இருக்கு. அவருக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் என்பதால், ராகுலை முதலில் சென்னை மாநகராட்சியின் 33-வது வார்டு இடைத் தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்துள்ளோம். முதன் முதலாக தமிழ் நாட்டில் போட்டியிடுவதால் அவரது வெற்றியை உறுதி செய்ய அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு இளங்கோவன் சிபாரிசு செய்துள்ளார்.rahul priyanka

ராகுலுக்காக சோனியா,பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்து 33-ம் வார்டில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ராகுல் காந்தி தமிழ் நாட்டில் பிறக்காததால், அவருக்கு 33-ம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தகுதி இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்ற பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet