சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள் குஜால் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா 10 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார், அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஊழல் மற்றும் லஞ்சத்தின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில் முக்கியமாக மாதந்தோறும் சம்பளம் தவிர்த்து ‘லஞ்ச’ப்படியும் கொடுக்கப்படும். ஒரு மாதத்தில் யார் லஞ்சம் அதிகம் வாங்குகிறார்களோ அந்த ஊழியர்களுக்கு சிறப்புப் பரிசும், போனஸ் ‘லஞ்ச’ ப்படியும் கூடுதலாக வழங்கப்படும். இது மட்டுமல்லாது அவர்கள் அலுவலகத்திலேயே தூங்குவதற்கு ‘ஸ்லீப் அலவன்ஸ்’ என்னும் புதுமையான சலுகையை வழங்க முடிவு செய்துள்ளேன். இந்த சலுகையை பெற ஊழியர்கள் அலுவலகத்தில் கண்ணைத் திறந்து கொண்டே தூங்க வேண்டும். இதற்குப் பிறகாவது அரசு அலுவலர்கள் உத்வேகத்துடன் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என்று ஜெயலலிதா கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks