சென்னை: வரும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் ஜாவடேகர், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில், அவரையும் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், கூட்டணி குறித்து ‘விஷ’காந்துடன் முழுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, கேப்டன் ‘விஷ’யகாந்த் இந்த தேர்தல்ல நாங்க ஜெயிச்சாலும் தோத்தாலும் எனக்கு அட் லீஸ்ட் ஹரியானா அல்லது ராஜஸ்தானில் முதல்வர் பதவி கொடுக்கணும், அப்படியே, என் மைத்துனர் சுதீஷுக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கணும்; என் மனைவிக்கு, பிரதமர் பதவி, மகனுக்கு மந்திரி பதவியும் வேணும் என்று கேட்டுள்ளார். இதை நான் டெல்லி சென்று தலைவர் அமித் ஷாவிடமும், பிரதமர் மோடியுடனும் கலந்து பேசி ஒரு முடிவு எடுப்போம். எப்படியும் ‘விஷ’காந்தை கூட்டணியில் சேர்ப்பதற்கு அவர் கேட்கும் எதையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.
ஒரு உள்ளூர் பாஜக பிரமுகர் கூறும்போது, குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு அப்படின்னு நினைச்சுக்கிட்டு இவங்க இருக்காங்க, ஆனா ‘விஷ’காந்த் குடும்ப அரசியல்ல கருணாநிதியை மிஞ்சிடுவாறு போல என்று கவலைப்பட்டார்.
There are no comments yet
Or use one of these social networks