ஆட்சிக்கு வந்தால் விஜயகாந்தின் பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்படும் – பிரேமலதா தகவல்

387

சென்னை: சென்னை ராயப்பேட்டை தேமுதிக மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், பேச்சு யாருக்கும் புரியவில்லை என்று கூறுகிறார்கள். பல ஆண்டுகளாக அவருடன் இருக்கும் எனக்கே அவர பேச்சு புரியவில்லை, உங்களுக்கு எப்படி புரியும் என்பது தெரியவில்லை. கேப்டனே பலமுறை தனது பேச்சு யாருக்கும் புரியாது என்று ‘தெளிவாக’ கூறியுள்ளார். அதுபோன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை. எதுவுமே தெரியாத நிலையில், எல்லாம் தெரிந்தது போன்று பேசும் தலைவர்கள்தான் உள்ளனர்.

டாஸ்மாக் பிரச்னையும் கிங் பிஷர் விவகாரமும் வயோதிக காலத்தில் அவரைப் பாடாய் படுத்துகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விஜயகாந்தின் பேச்சை எல்லோருக்கும் தமிழில் மொழி பெயர்த்து கேப்டன் டிவியில் ஒளிபரப்பு செய்வோம் என்று .பிரேமலதா கூறினார்.

There are no comments yet