சென்னை: இன்று மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள வைகோவின் இல்லத்தில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், முதல் கட்டமாக தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியுள்ளோம். இப்போதைக்கு எதையும் சொல்லமுடியாது, தேர்தல் வரை யார் இந்த கூட்டணியில் இருப்பார்கள் என்று எங்களுக்கே தெரியவில்லை. அவரவர்கள் அழைப்புக்களுக்கா காத்திருக்கிறோம்.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருகிறோம். மீண்டும் விஜயகாந்தை கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம். இதுதொடர்பாக விஜயகாந்த்தை நேரில் சந்தித்துப் பேசி, அவர் காலில் விழுந்து கதறி அழவும் தீர்மானித்துள்ளோம். விஜயகாந்த் வந்தால் குறைந்த பட்சம் டெபாசிட் கிடைக்க வழி கிடைக்கும் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks