சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தனது இல்லம் அமைந்துள்ள மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அவருடைய பெயரில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி, தி.மு.க. கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. எனவே குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து குஷ்பு கூறியதாவது: இந்த தேர்தலில் நான் திமுகவிற்கு தீவிரமாக பிரச்சாரம் செய்ய இருகிறேன், கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் முகாமிட்டு அவருக்கு உதவி செய்ய உள்ளேன். அது மட்டுமன்றி என்னைவிட ‘தெறம’ உள்ளவர்கள் முன்னுக்கு வரவேன்றும், அந்த வகையில் பார்த்தால் கட்சியிலும், சினிமாவிலும் என்னைவிட நக்மாதான் நிறைய (‘தெறம’) காட்டியிருக்கிறார், எனவே மைலாப்பூரை நக்மாவுக்கு விட்டுக் கொடுகிறேன் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks