சென்னை / கோயம்புத்தூர்: ஈஷா யோகா மையத்தில் பெண்கள் போதை மருந்து அளிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுவதாக இரண்டு பெண்களின் பெற்றோர் புகார் கூறினர். அந்த இரண்டு பெண்களும் சுய விருப்பத்தினாலேயே சன்னியாசம் பூண்டதாக கூட்டாக டிவி யில் பேட்டி அளித்தனர். ஈஷா யோக மையம் வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்த பெற்றோர் கதறினர். தங்கள் மகள்கள் சித்ரவதைக்கு உட்படுத்தப் படுவதாகவும், உண்ணும் உணவில் போதை மருந்து கலக்கப் படுவதாகவும், புகார் கூறினர். மகள்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அஞ்சுகின்றனர்.
இது குறித்துமேலும் விவரம் அறிய நமது கப்ஸா நிருபர் தனது பத்தாவது அவதாரத்தில், மலையில் உச்சியில் உட்கார்ந்து, கடலுக்கடியில் யோகாசனத்தில் ஈடுபட்டிருந்த ஜகஜால கில்லாடி ஜக்கி வாசுதேவ் அவர்களை நிஷ்டையில் எடுத்த பேட்டியில் கூறியதாவது:
நிருபர்: ஸ்வாமி உங்கள் பூர்வீகம்தான் என்ன, எந்த லோகத்தில் இருந்து இந்தியாவில் அவதரித்தீர்கள்:
ஜக்கி வாசுதேவ்: தெலுங்கு பூர்வீகத்தை கொண்ட நான் மைசூரில் பிறந்து, வளர்ந்து தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய 1989-ம் ஆண்டு தனது காலடியை வைத்த நாள் முதல் தமிழ்நாடு சுபிக்ஷம் பெற்றுவிட்டது. ஜெகதீஷ் என்ற நான் வந்த பிறகு பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், பொறாமை, கோபம் போன்றவற்றை எனது யோகா என்ற ஒரே ஆயுதத்தால் முடிவுக்கு கொண்டு வந்தேன்.
நிருபர்: உங்கள் யோகா வியாபாரம் இவ்வளவு பிரபலமானது எப்படி
ஜக்கி வாசுதேவ்:: நரேந்திர மோடி முதல், நம்ம கேப்டன் விஜயகாந்த் வரை என் காலடியில் இருக்கும்போது பிரபலம் ஆவது ரெம்ப கஷ்டமா என்ன. சின்ன வயதில் இருந்தே Jobக்கு போய் சம்பாதிக்கிற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. நான் ஈசியா பணத்தை சம்பாதிக்க ஒரே வழி ஆன்மிகம் இல்லாட்டி அரசியல் தான். நான் தொடங்கிய ஈஷா யோகா மையத்தில் உடலை வருத்தி யோகா பண்ணும் வேலை எல்லாம் கிடையாது. பேருக்குத் தான் யோகா, இங்கு வரும் young girls வாழ்க்கை எல்லாம் ஸ்வாஹா. நான் வழங்கும் மந்திரித்த பிரசாதத்தில் போதை மருந்து கலப்பதாக கூறுகிறார்கள். கலப்படம் எங்குதான் இல்லை, மளிகை கடையில் கூடத்தான் அரிசியில் கல்லை கலப்படம் பண்றான். அது மாதிரி தான் இதுவும்.
நான் ஒரு நல்ல businessman கூட இல்லை என்றால் என் கட்டிடத்தை காப்பாற்ற அடிபொடிகளை ஏவி அதற்காக டெல்லிக்கும் சென்னைக்கும் அலறியடித்துக் கொண்டு பறந்து கொண்டிருக்கும் வேளையிலும் என் மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக வசதியான இடத்தில் செய்து வைத்து விட்டு, அடிமைகளுக்கு யோக மார்க்கமான துறவறத்தில், மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கி, அவர்களுக்கு மொட்டை போட்டு சாமியார் ஆக்கி பணம் சம்பாரிக்க முடியுமா? என் உபதேசமெல்லாம் ஊருக்கு தான். எனது குடும்பத்திற்கல்ல. இங்கு வருபவர்களுக்கு வாழ்க்கையில் ‘பற்று’ வைக்க கூடாது என்று மூளைச்சலவை செய்து என் பாங்க் அக்கௌண்டில் ‘வரவு’ வரும்படி பார்த்துக் கொள்வேன்.
நிருபர்: ஏதோ ரெண்டு பொண்ணுங்கள தேடி அவங்க பேரெண்ட்ஸ் வந்தங்களே…
ஜக்கி வாசுதேவ்: எனக்கு வாய்த்த அடிமைகள் கீதா மற்றும் லதா இருவரும் மிகுந்த திறமைசாலிகள். கிளி மாதிரி நான் சொன்னதை அப்படியே ஒப்பித்து விட்டார்கள், நம்ம சரக்கு செய்யும் வேலை அப்படி! otherwise I would have been in a problem. இந்த ஜக்கி ஜமாய்க்க தெரிந்தவன். educated people கூட என்னிடம் ஜடங்கள் ஆகி விடுவார்கள், under my magic spell.
நிருபர்: உங்கள் ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு நீங்கள் தருவதுதான் என்ன?
ஜக்கி வாசுதேவ்: அந்தக் காலத்தில் என்னை தேடிவரும் பெண்களுக்கு குழந்தை தருவேன். இப்போதெல்லாம் நான் எதுவும் தருவதில்லை, ஆனால் கோவணத்தை கூட விடாமல் உருவி விட்டு விடுவேன். அதற்க்கு பெயர்தான் நிர்வாண நிலை. என் மையத்தில் குழந்தைகளும், பெரியவர்களும் கோமா நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுகிறார்கள். அது பரவச நிலை எனப்படும், ஆனந்த அலை. அந்த நிலை வந்தவுடன் ‘அவசர நிலை’ வந்து விடும். அதாவது கிட்னியை உருவும் நிலை.
நிருபர்: எதிர்ப்புகளை எவ்வாறு சமாளிக்கிறீகள்?
ஜக்கி வாசுதேவ்: எனக்கு மோடி முதல் கேடி வரை தொடர்பு இருக்கிறது. இங்கு வழங்கப்படும் பிரசாதத்தை சோதனை செய்ய எந்த கொம்பன் வந்தாலும் அவரையும் என் ஆனந்த அலையாலும், அடிபொடிகளை ஏவி அவர்களின் மறை கழற்றி என் அடிமை ஆக்கி மையத்துக்கு அழகு சேர்ப்பான் இந்த ஜாம்பவான் ஜக்கி என்று கூறி பேட்டியை முடித்து கொண்டார்.
There are no comments yet
Or use one of these social networks