சென்னை: ஒலிம்பிக்கில் மஞ்சு விரட்டு விளையாட்டை சேர்க்க வேண்டி இன்று சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். இது குறித்து அவர் இன்று இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தமுக்கு அடித்து ஆடிய தனது கட்சி சிறுத்தைகளுக்கு மத்தியில் சத்தமாக முழங்கினார். இதைக் கேட்டு எதிரே இருந்த கூட்டம் அவர் பேசுவதை வாயை திறந்து பார்த்துகொண்டு கை தட்டி ஆர்பாட்டம் செய்தது. கூட்டத்தில் மேலும் திருமா பேசியதாவது: நம்முடைய சமுதாயம் ஏற்றம் பெற வேண்டுமானால் மஞ்சு விரட்டை நாம் கண்டிப்பாக ஒலிம்பிக்கில் கட்டாயம் இடம் பெற செய்ய வேண்டும். அதற்கு நமது சிறுத்தைகளை தயார் செய்ய வேண்டும் என்று கூறியபோது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ‘அய்யா போன மாசம் நான் பக்கத்து வீட்டு பெண் “மஞ்சு”வை விரட்டி விரட்டி காதலிச்சேன். அவ அப்பன் கையில பெரிய அரிவாள தூக்கி என்னை துரத்தி துரத்தி வந்தான் அவங்க அப்பன்கிட்ட இருந்து நான் தப்பிசசி வரதுக்குள்ளே என் உசிரே போயிட்டு வந்தது, இந்த மஞ்சு விரட்டு சட்டப்படி செல்லுமா’ திருமாவிடம் ஆலோசனை கேட்டார்.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமா, “நாடு முன்னேறும் பொது நாமும் முன்னேற வேண்டும், அதற்க்கு ஒரே வழி, இது போன்ற தமிழர் விளையாட்டுக்களை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும். எங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கேப்டன் விஜயகாந்த் உத்திரவுப்படி தொப்புளில் பம்பரம் விடுதல், கோலி குண்டு அடித்தல் போன்ற வீர விளையாட்டுகளையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும். ஜெயலலிதாவின் அடக்கு முறை ஆட்சியின் எனது கட்சியினர் கோலிக் குண்டு விளையாடக் கூட உரிமையின்றி, இப்போது துப்பாக்கி குண்டுகளுடனும், பெட்ரோல் குண்டுகளுடன் எங்களது எதிரிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமை மாறவும், எங்களது கோரிக்கைளை நிறைவேற்றக் கோரியும் என் கட்சியை சேர்ந்த சிறுத்தைகள் இன்று முதல் சென்னை சாலைகளில் திரியும் மாடுகளை மறித்து போராட்டம் நடத்துவார்கள்” என்று ஆவேசமாக பேட்டியளித்தார்
There are no comments yet
Or use one of these social networks