சென்னை: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீது தமிழகம் முழுவதும் எண்ணிலடங்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. சென்னை, விழுப்புரம் உட்பட 7 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்காக, கேப்டன் விஜயகாந்தும், அவரது மனைவி அன்னை பிரேமலதாவும் ஊர் ஊராக, நீதி மன்றம் நீதிமன்றமாக சென்று வழக்காடுவதும், ஜாமீன் வாங்குவதும் தினசரி கதையாகி விட்டது.
இவ்வாறு தினம் தினம் நீதி மன்றம் செல்வதால், தனது மற்ற அலுவல்களான, மகனின் அடுத்த படத்திற்கு கதை கேட்பது, கட்சிக்கார கோமாளிகள் யாரையாவது அறைவது, பத்திரிகை நிருபர்களை பார்த்து தூ என துப்புவது போன்றவை பாதிக்கப்படுவதாக கேப்டன் விஜயகாந்த் வருத்தப்படுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கேப்டனுக்கு எப்போது யோசனை சொல்லி அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கும் அன்னை பிரேமலதா, இனிமேல் நீதி மன்றங்களுக்கு கேப்டனுக்கு பதிலாக சினிமாவைப் போல் ‘டூப்’ நடிகர்களை அனுப்பலாம் என்று யோசனை சொன்னதாக தெரிகிறது. கேப்டனும் இதற்க்கு ஆமோதித்து, தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்ய, சுதீஷ் மற்றும் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் செல்ல இருப்பதாக அவருக்கு நெருக்கமான கட்சியினர் தெரிவித்தனர்.
There are no comments yet
Or use one of these social networks