புது டெல்லி: மிகுந்த எதிர் பார்ப்புடன் அறிமுகப்படுத்தப்பபட்டுள்ள ரிலையன்ஸ் “ஜியோ” 4 ஜி சேவைக்கு நாளிதழ்களில் தலைப்பு பக்கங்களில் முழுபக்க அளவில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. அந்த விளம்பரங்களில் ‘பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவை ஜியோ நனவாக்கும்’ என்ற வாசகம் இருந்தது. இதைகண்டு வெகுண்டு எழுந்த டெல்லி modi jioமுதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் ‘மோடி அவர்களே!, நீங்கள் ரிலையன்ஸ் விளம்பரங்களின் மாடலாக மாறி விடுங்கள். அம்பானியின் பாக்கெட்டுக்குள்தான் மோடி இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்கு உழைப்பாளிகள் வரும் 2019-ம் ஆண்டு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்க்கு பிரதமர் மோடி தனது மன்கி பாத் நிகழ்ச்சியில் தேநீரை சுவைத்தபடி நமது கப்ஸா நிருபருக்கு விளக்கமளித்தார்: “உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது நமக்கெல்லாம் பெருமையான விஷயம். உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை ரூ. 41,500 கோடி, இதில் 9000 கோடிmoadi add1யை மல்லயாவிடம் கொடுத்து வெளிநாட்டில் ஓய்வு எடுக்க அனுப்பி உள்ளேன். இது போக எனது வெளிநாட்டு பயண செலவுகள், ஒபாமா இந்தியா வந்தபோது நான் தைத்த சூட் செலவு எகிறிவிட்டது. மேலும் வழக்கமாக “துண்டு விழும்” பட்ஜெட்டில் இந்த முறை பல மீட்டர் “பெட் ஷீட்” விழுந்துள்ளது. காசில்லாமல் கஜனா காலியாக உள்ளது. இந்த கடன்களை எல்லாம் அடைக்கவும், பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்கவும் இனி வரும் ஜியோ விளம்பரங்களில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கொடுத்த ஐடியா படி நடிக்க முடிவெடுத்துள்ளேன். அதற்கான முன்னோட்டம் தான் ஜியோ விளம்பரங்களில் என் படம் போட அனுமதி அளித்தது. modi add2சமீபத்தில் அம்பானி குடும்பத்திற்கு இசட் பிரிவு பாதுகாப்பு அறிவித்தது கூட இந்த விளம்பர வாய்ப்பை பெற நான் செய்த கைமாறுதான். சென்ற முறை ராக்கி சாவந்த் ஆடைகளில் என் படங்களை பதித்து சுதந்திர தின விழாவில் பேஷன் ஷோ நடத்தினேன். இந்த முறை நானே களத்தில் இறங்கியுள்ளேன். அடுத்தபடியாக காங்கிரசுக்கு ‘செக்’ வைக்கும் வகையில் கைத்தறியில் தயாரான “சுடர் மணி” ஜட்டிகள் “முத்துச் சிப்பி” உள் பாடிகள் போன்ற விளம்பரங்களில் ‘லேடி’ மாடல்களுக்கு பதிலாக இந்த ‘மோடி’ நடித்து ஆஸ்கார் வாங்குவேன்” என்று உற்சாகமாக பேட்டியை முடித்தார்.

modi add3இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, இதில் உள் குத்து இருப்பதாக எதுவும் தெரியவில்லை. மோடி ஜி என்று வழக்கமாக அவரை அழைப்பதற்கு பதிலாக இனிமேல் மோடி ஜியோ என்று அழைக்கபடுவார். அவரின் பயணச்செலவு பற்றாக்குறை பற்றி ஏற்கனவே என்னிடம் மிகவும் வருத்தப்பட்டார். ஏழை நாடு இந்திய என்பது எல்லோருக்கும் தெரியும் அதனால் தான் நாங்கள் அனைவரும் ஆடம்பரச்செலவுகளை தவிர்த்து இந்த மாதிரி பார்ட் டைம் வேலை பார்த்து அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுகிறோம் என்று மோடிக்கு வக்காலத்து வாங்கினார்.

பகிர்

There are no comments yet