சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி சமீபத்தில் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டில் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து, ஓயாமல் உழைப்பவன் இந்தக் கருணாநிதிஎன்று கூறியிருந்தார். விகடன் பேட்டி குறித்து மேலும் விபரமறிய கலைஞரை நமது கப்ஸா நிருபர் சந்தித்த பொது கூறியதாவது: வழக்கமாக நான் தொண்டனுக்கு கடிதம் எழுத பேனாவை எடுத்தேன், பேனா முள் தேய்ந்தும் மை காய்ந்தும் விட்டது. அதனால் தான் விகடன் நிருபரை கூப்பிட்டு என் உள்ளக்கிடக்கைகளை கொட்டி தீர்த்தேன். திமுக என்ற உளுத்துப்போன ஆலமரம் என் கடைசி மூச்சு இருக்கும் வரை என் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். எனக்குப் பின் அதை பங்கு போட்டு ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். என்னை அடித்த அழகிரிக்கு எதுவும் கிடையாது. அழகிரியோ, அவரது மகனோ எனது சொத்துக்களில் உரிமை கோரா .முடியாது. ஏனென்றால் திமுகவின் அனைத்து சொத்துக்களும், நானே என் முழு உழைப்பினால் விஞ்ஞான ஊழல் செய்து சம்பாதித்தேன். நான் எனக்கு ஓய்வு கொடுத்தாலும், எனது ஊழலுக்கு ஓய்வு கொடுக்க விரும்பவில்லை. அனால் எனக்கு வாய்த்த வாரிசுகள் சரியில்லை. சரியாக ஊழல் செய்யாமல் 2-ஜி யில் மாட்டிக் கொண்டனர். எனவே ஆண்டவன் எனக்கு மேலும் ஆயுளைக் கொடுத்து மேலும் பல தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்க அருள் புரிய வேண்டும்.
அது மட்டுமல்ல ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தவாறே காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்கிறார். எனக்கு ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம் நடனம், மானாட மயிலாடவில் கலந்து கொள்ள கால்ஷீட் கேட்கலாம் என்று இருக்கிறேன். நான் கைதூக்கி விட்டவுக்கு என்னைப் பற்றிய உண்மைகள் தெரியும். அதுபோல் வைகோ பற்றிய உண்மைகள் பல எனக்குத் தெரியும். அதனால்தான் வைகோ போன்றோர் என்னை பற்றிய உண்மைகளை வெளியிட உலகம் அழியும் வரை காத்திருக்க வேண்டும். அனால் ஒன்று நிச்சயம் ஸ்டாலின் குடு குடு கிழவராகி கொம்பு ஊன்றி நடந்தாலும் நான் இருக்கும்வரை தலைமை பொறுப்பு என்னிடம்தான் இருக்கும்” என்று முடிக்க, நமது நிருபர் மு க அழகிரி யின் பல்ஸ் என்னவென்று பார்க்க ஒரு போலி டாக்டரை அழைத்து கொண்டு மதுரை விரைந்துள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks