புது டெல்லி/ ஜப்பான்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் புழங்கி வரும் கருப்பு பணத்தை ஒழிக்க மேலும் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த மோடி அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி நாட்டை கருப்பு பணத்தில் இருந்து தூய்மைப்படுத்த எடுத்தது. யாரையும் கஷ்டப்படுத்த எடுத்த நடவடிக்கை அல்ல, வரும் காலங்களில் 2000 ரூபாயை செல்லாது என அறிவிக்க தயங்க மாட்டோம் என்று சமாளித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி, பாகிஸ்தானில் இருந்து வரும் கள்ள நோட்டுகளை தடுக்க, ரூபாய் நோட்டுகளை அறவே ஒழித்து அமேரிக்கா, ஆஸ்திரேலியா போல் டாலர்களை அறிமுகப்படுத்த இருப்பதாக நமது கப்ஸா நிருபருக்கு வந்த செய்தியை அடுத்து ஜப்பனில் இருந்த பிரதமர் மோடியை சாட்டிலைட் மூலம் தொடர்பு கொண்டபோது, மோடி கூறியதாவது: “பழைய நோட்டுகளை டிசம்பர் முப்பதாம் தேதி டிசம்பர் வரை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளோம். சரியாக புதுவருடம் பிறக்க சில நிமிடங்கள் முன்பு புதிய 2000 நோட்டு செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் வைத்துள்ளேன், அதை தற்போது என் நண்பர்களுக்கு நோட்டு தடை செய்ய உள்ளதை முன்பே சொன்னது போல் சொல்ல மாட்டேன். அப்படியே படிப்படியாக எல்லா நோட்டுகளையும் தடை செய்து கொண்டே வந்து மார்ச் முப்பத்தி ஒன்றாம் தேதி கடைசியில் புது ஒரு ருபாய் நாணயம் மட்டும் செல்லும் என்று அறிவித்து விடுவேன். அந்த நாணயம் ஒருபுறம் தாமரை சின்னத்துடன் மறுபுறம் சிவன் பார்வதி பிள்ளையார் முருகன் என்று இந்து கடவுள்கள் படம் பொறித்து கழுத்தில் மாட்டி கொள்ளும் வசதியுடன் பழனி முருகன் “டாலர்” வடிவில் வெளியிடப்படும். இந்த இந்திய டாலர் அமெரிக்க டாலருக்கு நிகராக பேசப்படும் காலம் ஒருநாள் நிச்சயம் வரும் என்றார்.
மோடியின் திட்டத்தினால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அதிர்ச்சியில் இருப்பதற்காகவும், இந்திய வல்லரசாவதை தடுக்க பாகிஸ்தானில் போலி இந்திய டாலர்களை தயாரிக்க காண்ட்ராக்ட் விட முடிவு செய்துள்ளதாகவும் அமெரிக்காவிலில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks