சென்னை: பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் ஸ்வைப் மிஷினுடன் அமர்ந்திருப்பது பொன்ற புகைப்படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின் ‘செல்லாது’ அறிவிப்பால் நாடு முழுவதும் பல திருமணங்கள் தடைப்பட்டுள்ள அவல நிலையில், திருமண வீட்டாருக்கு வங்கிகளில் இருந்து பணம் எடுக்க சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் ஒருபடி மேல போய் ஒரு சர்தார்ஜி வீட்டு திருமணத்தில் இந்த புதுவிதமான சமயோஜித யோசனை முதன் முறையாக செயல்படுத்தபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை தனது லேப்டாப்பில் பார்த்த கலைஞர் கருணாநிதி உடனடியாக ஒரு ஸ்வைப் மிஷின் பிலிப்கார்டில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளது ரகசியமாக நமது கப்சா நிருபருக்கு தெரியவந்தது. இதுகுறித்த தகவலை அறிய கோபாலபுரம் சென்ற கப்சா நிருபரிடம் ஒரு அடிமாட்டு திமுக தொண்டர் கூறியதாவ்து: “அரசியலில் யார் எது செய்தாலும், சொன்னாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பது கலைஞர் அவர்களால் பல மாமாங்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை உழைத்து தனது குடும்பத்துக்காக 14 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பவர், மோடி அவர்களின் ‘செல்லாது’ அறிவிப்பால் மனம் நொந்து, அம்மாவுக்கு போட்டியாக நேய்வாய்ப்பட்டார். இந்த நிலையில் தனது சிகிச்சை படங்களை இரண்டு மாததிற்கு பிறகு டிவிட்டர் பக்கத்தில் வெளியட லேப்டாப்பை திறந்தவர், இந்த புதிய டிஜிட்டல் ஐடியாவை பின்பற்றி ஸ்வைப் மிஷின் வாங்கியுள்ளார். நலம் விசாரிக்க வருபவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்க இந்த ஓய்வுக்கு கலெக்ஷன் பண்ண தேய்ப்பு மிஷினை வாங்கியுள்ளார்” என்று முடித்தார்.
There are no comments yet
Or use one of these social networks