சென்னை: அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா டிச.5 இரவு அமரரானார். இது குறித்து ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இந்தியா தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.’ என்று ட்வீட்டினார். இந்த நிலையில் டிச. 12ம் தேதியன்று கொண்டாடப்படும் தன்னுடைய பிறந்தநாளை இந்தவருடம் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் தகவல் அனுப்பியுள்ளார். போஸ்டர் பேனர் தோரணம் என எவ்விதத்திலும் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது, தன்னைப் பார்க்க நேரில் வரக்கூடாது என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிறந்த நாளன்று சென்றால் நேரில் பார்க்க அனுமதிக்க மாட்டார் என்று நமது கப்ஸா நிருபர் உடனடியாக ரஜினியை சந்திக்க சென்று கால்வலியால் ‘கோடாலி’ தைலம் தேய்த்துக் கொண்டிருந்த ரஜினியிடம் கறந்த பேட்டி: அம்மாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது கூட பெட்ரோல் போட காசில்லை. தங்கமகன் தனுஷிடம் தான் கைமாத்து வாங்கிக் கொண்டு போனேன். அம்மாவும் நானும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள், ‘பில்லா’ படத்தில் என் கூட நடிக்க அம்மா மறுத்துவிட்டார். அம்மா என் ரசிகர் மன்றங்களை கணக்கெடுத்தபோது எனக்கு வந்த கோபம், படையப்பா படத்தில் அம்மாவை வில்லியாக சித்தரித்தது அனைத்தும் அம்மாவை அமரராக பார்த்ததும் தவறு என்ற எண்ணம் வந்து விட்டது. அந்த துக்கத்தில் இருக்கும் நான் மார்ச் 31க்குள் எப்படி என்னிடம் உள்ள பழைய நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றுவது என எண்ணிக் கொண்டு இருக்கும் வேளையில் எப்படி பிறந்தநாளை கொண்டாட முடியும்.. ‘சிவாஜி த பாஸ்’ படத்தில் சிங்கிளாக வந்த சிங்கமாக நடித்து சிங்கள் ஒன் ருபீ காயினை ‘டாஸ்’ போட்டு சுண்டிக்காட்டி ஸ்டைல் செய்து ஏவி எம் சரவணனிடம் ஒரு பெரும் தொகையை கறந்தேன். பிறகு எந்திரன் படத்தில் ‘என்னை யாரலயும் அழிக்க முடியாது’ என்று வசனம் பேசி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் அந்த படத்தில் வரும் என் க்ளோன்களை போலவே பழைய 500, 1000 நோட்டுகளை வாங்கி வட்டிக்கு விட்டு குட்டி போட வைத்திருந்தேன். கபாலியில் விமானம் முதல் டாய்லட் வரை என் படத்தை போட்டு விளம்பரம் செய்து, தாலாட்டி வளர்த்த தமிழ் நாட்டு மண்ணை மறந்து மலேசிய மக்களுக்காக போராடும் மண்டேலாவாக பாவ்லா காட்டினேன். இப்படி இதுவரை வாயால் வடை சுட்டு கடை விரித்து தமிழினத்தின் கடைக்கோடி ரசிகன் வரை ஏமாற்றி சேர்த்த கோடிகள் மொத்தமும் மோடியின் ஒற்றை அறிவிப்பால் மொத்தமாக காலவதியாகி விட்டது. எந்திரன் 2 படப்பிடிப்பில் காலிலும் அடிபட்டு விட்டது. அதனால் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது செலவிட வைத்திருக்கும் பணத்தை ரசிகர்களிடம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொண்டு வந்து என் போயஸ் தோட்ட வீட்டில் தாரை வார்க்க சொல்லியுள்ளேன். மீதமுள்ள பணத்தை மோடியின் ‘கோ கேஷ்லெஸ்’ திட்டப்படி எந்திரன் 2 ரிலீசின் போது ஆன்லைன் டிக்கட் புக்கிங்கில் கபளீகரம் செய்து கொள்ள் திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks