சென்னை: டிச. 5 முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது மரணம் குறித்து பல்வேறு யூகங்களும், சந்தேககங்களும் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. இது குறித்து நடிகை கவுதமி மோடிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு நிலவியது. அதிமுகவில் ஒரு பிரிவினர் வெகுண்டு எழுந்து ‘கவுதமி புரளியை கிளப்புகிறார்’ என்று கவுதமி படத்தை எரித்தும் படத்தை செருப்பால் அடித்தும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் சந்தேகம் கிளப்பியவர் சசிகலா புஷ்பா, அவருடன் இப்போது கவுதமியும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரையும் பின்புலத்தில் இருந்து சசிகலா நடராஜனுக்கு எதிரான ஒருவர் இயக்குவதாக பேச்சு எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அப்பல்லோ நிர்வாகம், ‘கவுதமியின் இந்த திடீர் அக்கறை வியப்பளிக்கிறது’ என்று கூறியுள்ளது. மேலும் கமல் நடித்து வெளியாவதில் ஜெயலலிதாவால் சிக்கலான ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திலும் கவுதமி பணிபுரிந்தார். கவுதமி கடந்த 2005ம் வருடம் புற்று நோய் சிகிச்சை மேற்கொண்டது இதே அப்பல்லோவில் தான். அப்போது தனது சிகிச்சையை ரகசியமாக வைக்க சொல்லி உள்ளார். சமீபத்தில் கமல் ஹாசன் காலில் அடிபட்ட போது மகள் ஸ்ருதிஹாசனுக்கு தகவல் தெரிவிக்காமல் அப்பல்லோவில் அட்மிட் செய்ததாகவும், மூன்றாவது நபர் மூலம் தெரிந்து கொண்ட ஸ்ருதி கோபத்துடன் அப்பல்லோ வந்து திட்டியாதகவும் கண்ணால் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. அதன் பிறகே லிவிங் டு கெதர் ப்ரேக் அப் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, பாஜகவை விட்டால் எந்த கட்சியில் சேர்ந்து முதலமைச்சர் ஆவது என்று சீட்டு குலுக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்த கவுதமி நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: “ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறதோ இல்லையோ இப்போது எனக்கு பப்ளிசிட்டி தேவைப்படுகிறது. எனக்கு 2005ல் அப்பல்லோவில் நடந்த சிகிச்சையை ரகசியமாக வைக்க சொன்னேன். என் பேச்சை கேட்டு எனக்கு நடந்த சிகிச்சையை எனக்கே கூட தெரிவிக்காமல் அப்பல்லோ ரசிகசியமாக வைத்திருந்தது. அது போல அம்மாவின் சிகிச்சையை ரகசியமாக வைக்க முடியாது, ஏன் என்றால் நான் கமலுக்கு மட்டுமே சொந்தம், ஆனால் அம்மா எல்லோருக்கும் சொந்தம்.
கமலுக்கு கால் உடைந்த விஷயத்தை ரகசியமாக வைக்க தவறிய நிர்வாகம் ஸ்ருதிக்கு தெரியும் படி செய்துவிட்டது. அதன் பிறகு ஸ்ருதி அப்பல்லோவுக்கு வந்து என்னுடன் நடத்திய குழாயடி சண்டையால் நான் வெகுவாக மனநிலை பாதிக்கப்பட்டேன். அதனால் நான் கமலை பிரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. எனது மகளை எப்படி கரை சேர்ப்பது, ஏதாவாது கட்சியில் இணைந்து அம்மா போல் முதலமைச்சர் ஆகி விடலாமா என்று குழப்பத்தில் உள்ளேன். ஸ்ருதி உடனான எனது குடுமிபிடி சண்டையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது அப்பல்லோ. அதை பழி வாங்கும் விதமாகவே அம்மா மரணத்தில் மர்மம் இருப்பதாக கொளுத்திப் போட்டேன். தேவைப்பட்டால் புரட்சி தலைவர் எம்ஜியார் மரணத்தை பற்றி கூட கடிதம் எழுத தயங்க மாட்டேன்.” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks