சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொண்டை, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 20-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறவிருந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காரணத்தால் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைமை பொறுப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.kauna-going-to-hospital

இது பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஸ்டாலின் செயல் தலைவராவது தாமதமான நிலையில், ஸ்டாலின் மிக்க வருத்தத்துடன் இருப்பதாக அண்ணா அறிவாலய செய்திகள் தெரிவித்ததையடுத்து, நமது கப்ஸா நிருபர் ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, ஸ்டாலின் கூறியதாவது: நான் ஒரு ராசியில்லாத ராஜாவாயிட்டேன், உப்பு விக்க போன மழை பெய்யுது, பொரி விக்கப்போன காத்தடிக்கிதுன்னு கமல் ஹாசன் மாதிரி இப்போ பாடிக்கிட்டு இருக்கேன். பொதுக்குழு நடந்தா குறைந்த பட்சம் செயல் தலைவரா அறிவிக்கிறேன் என்று சொன்னார்கள், அதற்குள் அப்பா படுத்து விட்டார். வீட்டில் நன்றாக இருந்தவரை அண்ணன் அழகிரி வந்து பார்த்துவிட்டு போன பின்பு தான் இப்படி ஆகி விட்டார். அழகிரிதான் ஏதாவது செய்வினை அல்லது சூனியம் வைத்து என்னை பதவி ஏற்க விடாமல் செய்ய தலைவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சபரீசன் ஆலோசனைப்படி அந்த சூனியத்தை எடுக்க கேரளாவில் இருந்து மலையாள மாந்த்ரீக மகா குண்டலினி ஸ்வாமியை வரச்சொல்லி இருக்கிறேன்., அவர் அழகிரி வைத்த சூனியத்தை முறித்து அப்பாவுக்கு ஒரு முடிவு கட்டுவார் என்று கூறி ஓம் ஓம் என்று மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்தார்.

There are no comments yet