சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற போது அதிமுக கொடுத்த நெருக்கடியால், சிகிச்சை விவரங்களை ரகசியமாக வைத்ததும், புகைப்படங்களை வெளியிடாததும் நாடறிந்த செய்தி. எப்போதும் அரசியல் நைய்யாண்டி செய்து பழக்கப்பட்ட கருணாநிதி உடல் நலம் குன்றி சிகிச்சையில் உள்ளபோது கூட அப்பல்லோவையும் அதிமுகவையும் கலாய்க்கும் விதத்தில் காவேரி மருத்துவமனையில் டிவி பார்ப்பது போன்ற புகைப்படத்தை டிச.21 இன்று வெளியிட்டுள்ளனர் திமுகவினர். அந்த புகைப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக வீல் சேர் அல்லாமல் சாதாரண சேரில் அமர்ந்திருப்பது போல் உள்ளது.
இது குறித்து நமது கப்ஸா நிருபர் கேட்டபோது அங்கிருந்த கற்பனை கதாபாத்திரம் நர்ஸ் நளினா கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு தலைவர் லேப்டாப்பில் சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ படம் பார்த்துக் கொண்டிருந்தபோது வார்தா புயல் பாதிப்பால் கரண்ட் கட் ஆகி படம் பாதியில் நின்று விட்டது. தலைவர் முகம் சுருங்கி விட்டது. அந்த படத்தில் வரும் பிரபலமான வசனமான “பாம்பேயில நீங்க ரவுடியா இருந்தப்ப என பண்ணிகிட்டிருந்தீங்க, சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க…” என்ற பகுதி வரும்போது நின்றதால், தன்னை “காவேரியில் சிகிச்சை பெற்ற போது என்ன செஞ்சிகிட்டிருந்தீங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க…” என்று யாராவது கேட்டல் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக படத்தில் வரும் எஞ்சிய காட்சிகளை பார்த்து வசனங்களை மனப்பாடம் செய்து குறிப்பு எடுத்துக் கொண்டார். மற்றபடி அதிமுகவையோ அப்பல்லோவையோ அசிங்கப்படுத்த எண்ணமில்லை.” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks