சென்னை: கடந்த 2016 மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முன்பு கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் வரிப்பணம் எங்கே போனது?’ என கேள்வி எழுப்பிய நிலையில், அப்போதைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்தார். இந்த ‘அசாதாரண’ சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்பட்ட ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் ரஜினி போல மௌன நிலையில் இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் ஓபிஎஸ் கூறும்போது, எதையும் சரியாகப் புரிந்துகொண்டு “தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற” வெளுத்த, கருத்து கந்தசாமியான கமலஹாசன், எந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி வருவது வழக்கமாகி இருக்கிறது. கமலஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் பிச்சைக்காரனை பணக்காரனாவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்தார்.

 கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் விஸ்வரூபம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இயதியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர். அவர் தீபாவளி சமயத்தில் ஒரு துணிக்கடை விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் ஈரக் கையால் காகம் ஓட்டாத அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது. கமலஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்பலாம் என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார்.

தற்போது அவர் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் ஆரம்பித்து, தொடர்ந்து பொது மக்களை குழப்பும் விதமாக டுவீட்டுகள் எழுதி வருகிறார்.. முதலில் ஜல்லிக்கட்டு ஆதரவு டுவீட்டுகளை செய்து வந்த கமல், ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியையும் தடை செய்யுங்கள் என்றார்.. கவுதமி பிரேக்க்ப் ஆன பிறகு திரிஷாவுக்கு கொக்கி போட்டார், ‘காளையும் கன்னியும்’ வாழ விடுங்கள் என்றார். வெளிநாடுகளில் நடைபெறும் எருது விளையாட்டான ‘ரோடியோ’ வை தடை செய்யுங்கள் என்றார். பின்னர் சுப்ரமணியன் சுவாமி டுவீட்டுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் ஒட்டு மொத்த தமிழர்களையும் தன் பங்குக்கு ‘பொறுக்கிகள்’ என்றார். ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தும் பீட்டா வேறு பெயரில் வருவார்கள் என்று ‘எடுத்துக்’ கொடுத்தார். அதேபோல் ‘கூப்பா’ என்ற பெயரில் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதை எல்லாம் தாங்கிக் கொண்ட நெட்டிசன்கள் சிலர் பன்னீர் – சின்னம்மா குறித்த கமல்ஹாசனின் டுவீட்டுக்ளைப் பார்த்தும், பேட்டியை டிவியில் கண்டும், புத்தி பேதலித்து ‘குணா’ படத்தில் வரும் லூசு கேரக்டர் போல் பிதற்ற ஆரம்பித்து விட்டனராம். “Don’t breakTN in2 a country. I promise, All India will fight 4TN in a civil war of Ahinsa.None might die but the ignorant will come alive” (தமிழகத்தை உடைத்து நாடாக்காதீர்கள், மொத்த இந்தியாவும் அகிம்சை வழியில் போராடும், யாரும் சாக மாட்டார்கள் ஆனால் ஒதுக்கியவர்கள் உயிருடன் வருவார்கள்) என்ற வாசகத்தை படித்தவர்கள் திரும்பத் திரும்ப விட்டத்தை வெறித்ததாலும், சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருக்களில் சுற்றுவதாலும் பொது மக்கள் அச்சத்தில் 108க்கு போன் செய்ய, அவ்வாறு சுற்றிக் கொண்டிருந்தவர்களை மாநகராட்சி நாய் வண்டியில் ஏற்றி கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கப்ஸா நிருபர் தெரிவித்தார். பெரும்பாலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கீழ்பாக்கம் சென்று விட்டதால் அவர் ஆட்சியமைப்பதில் சிரமம் ஏற்படும் என தெரிகிறது
பகிர்

There are no comments yet