சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உடனே சரண் அடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்போது சசிகலா கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் தங்கி உள்ளார். விடுதியை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பை கேட்டதும் சசிகலா அதிர்ச்சி அடைந்தார். அவர் சரண் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நகல் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகு ஜெயிலில் இருந்து சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும். இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு நகலும் சசிகலாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இன்று பிற்பகலில் தீர்ப்பு நகல்கள் வழங்கும் நடைமுறை தொடங்கும். ஓரிரு நாளில் அவர்கள் சரண் அடைகிறார்கள். 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தீர்ப்பினால் சசிகலா மனச்சோர்வு அடைந்துள்ளார். இந்நிலையில் நமது கப்ஸா நிருபருக்கு பேட்டியளித்த சின்னம்மா கூறியபோது: என்னுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அக்கா தான் காரணம். அவரின்றி ஒரு அணுவும் அசையாது. இப்போது அவர் இல்லாததால் தீர்ப்பு எனக்கு எதிராக வந்துள்ளது. அக்கா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் மோடியிடம் ஏதாவது டீல் போட்டு வழக்கை சாதகமாக முடித்து வைத்திருப்பார். ஆனால் அப்பல்லோ அவர் கதையை முடித்து விட்டது. அக்கா எனக்கு விட்டுச்சென்ற பணிகள் ஏராளம். அவற்றில் ஒன்று பெங்களூர் அக்ரகார சிறையில் ஊதுபத்தி உருட்டுவது. மற்ற கட்சிப் பணிகளுடன் சேர்ந்து இதையும் செய்யவேண்டும் என்பது என் தலைவிதி என்று சோகமாக கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks