மெரினா கலவரத்தை சபாநாயகருக்கு நினைவூட்ட முயற்சித்தேன் – சட்டசபையில் சட்டையை கிழித்துக்கொண்ட ‘நமக்கு நாமே’ ஸ்டாலின் பேட்டி

567

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் மேஜை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி வரைக்கும் ஒத்தி வைக்கபட்டது. பின்னர் மீண்டும் கூடிய பொழுதும் ‘அசாதாரண’ சூழ்நிலை நிலவியதால் மீண்டும் சபை மூன்று மணி வரைக்கும் ஒத்திவைக்கபப்ட்டது.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சட்டசபை வளாகத்தில் தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து கப்ஸா செய்தியாளரிடம் ஸ்டாலின் பேசியதாவது: மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த கலவரத்தை நினைவு ‘படுத்தும்’ வகையில் சட்டபேரவைக்குள் நாங்கள் அராத்துப் போராட்டம் நடத்தினோம். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தை எரித்ததை நினைவு கூர்ந்து உரையாற்ற அனுமதி கேட்டேன், வாய்ப்பளிக்கவில்லை. இன்று சபை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது வழக்கமாக நாங்கள் ரகசியமாக பணம் பட்டுவாடா செய்து உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது போல் ‘ரகசிய’ ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினோம்., அதற்கு சபாநாயகர் இடம் தரவில்லை. பின்னர் திமுகவினரின் திட்டமிட்ட அமளி துமளியாலும் அல்லோல கல்லோலத்தாலும் கூச்சல் குழப்பத்தின் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நான் நேரடியாக சபாநாயகர் அறைக்கு சென்று அவர் இருக்கியில் அமர்ந்து தவறுகள் நடந்திருந்தால் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பேரவை ஒழுங்காக நடத்த வேண்டுகிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் பின்னர் அவை கூடிய பொழுது தன்னுடைய சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்த சபாநாயகர் தனபால் அதற்கு எங்கள் மீதே குற்றம் சாட்டினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது சபை மீண்டும் மூன்று மணி வரை ஒத்தி வைக்கபப்ட்டது. லன்ச் முடித்துவிட்டு தெம்பாக வந்த நாங்கள், சபாநயகரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சட்டபேரவை வளாகத்தில் அராத்துப் போராட்டத்தில் போராட்டடத்தில் ஈடுபட்டோம். ஆனால் திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். நாங்கள் எங்கள் சட்டைகளை ‘நமக்கு நாமே’ திட்டப்படி நாங்களே கிழித்துக் கொண்டு கோஷமிட்டோம்.” என்றார். வெளியே வரும் போது சட்டைப் பையில் பேனாவுடன் வந்த ஸ்டாலின் பேட்டியளித்த போது ‘திடீர்’ என தன்னுடைய சட்டை பொத்தான்கள் அறுந்து பாக்கெட் கிழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது அங்கு காண்போருக்கு இலவச மேஜிக் ஷோ பார்த்ததுபோல் இருந்தது. பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி புகார் கொடுக்க விரைந்த ஸ்டாலின், “சட்டைப்பை கிழிந்து தம்மடிக்க வைத்திருந்த தீப்பெட்டி மிஸ்சாகி விட்டதால், சபாநாயகரை எரிக்க முடியவில்லை, அதனால் மாலையில் ரவுடி தொண்டர்களை வைத்து சின்னம்மாவின் ‘கொடும்பாவி’ எரித்து ஆத்திரத்தை காட்டுவோம்.” என்றார்.

பகிர்

There are no comments yet