சென்னை: இங்கிலாந்து- இந்தியா இடையேயான 2017 ஆண்டு கலாசார வரவேற்பு விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது. விழாவினை இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். நிகழ்ச்சியில், மகாராணியின் கணவர் பிலிப், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நடிகர்கள் கமல்ஹாசன், சுரேஷ்கோபி, கபில்தேவ், பேஷன் டிசைனர் மனிஷ்அரோரா, மனிஷ்மல்கோத்ரா மற்றும் சித்தார் மாஸ்ட்ரோ ஆகியோர் கலந்துகொண்டனர். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது என கமல்ஹாசன் கூறினார். இது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது, பிரதமர் மோடி எனது பெயரை முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். இந்தியா- இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம் மிகச்சிறந்தது. இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்று கூறியுள்ளார். 70 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்கு தயாராக இருக்கும் நாம், அன்றைய நாட்களில் அரும்பாடும்பாட்டு, இந்தியாவிற்கும்- இங்கிலாந்திற்கும் இடையேயான உறவை ஏற்படுத்திக்கொடுத்த நம் நாட்டின் உயிர்நாடி மகாத்மா காந்தி அவர்களை நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த விழாவில், அதிகமாக இந்திய உணவுகள், இந்திய பாராம்பரிய நடனங்கள் மற்றும் இந்திய மலர்கள் பயன்படுத்தப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எலிசபெத் மகாராணியை கமல்ஹாசன் சந்தித்து உள்ளார். கமல்ஹாசனது எடுக்கவே படாத மருதநாயகம் படத்தின் தொடக்கவிழாவில் எலிசபெத் மாகாராணி 20 ஆண்டுகளுக்கு முன் கலந்து கொண்டார்.
சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் கூரைக் கண்ணாடி அடிக்கடி பிய்ந்து விழாத இடமாகப் பார்த்து நின்று கொண்டு நமது கப்ஸா நிருபரிடம் தனது லண்டன் அனுபவத்தை பகிர்ந்தார். “ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் தொடங்கியது முதலே ‘சோம்பேறி புரட்சியாளனான’ என்னுடைய ட்விட்டர் புலம்பல்களை பிரதமர் மோடி தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். அதில் ஈர்க்கப்பட்ட அவர் இந்த லண்டன் கலாசார விழாவிற்கு என் பெயரை முன்மொழிந்தார். ‘ஹேராம்’ திரைப்படத்தில் ‘கோட்சே’வை முதன்மை கதாபாத்திரமாக சித்தரித்து படமெடுத்த நான் இந்த விழாவில் கலந்து கொண்டு ஆங்கிலேயர்களை உச்சி குளிர வைக்க பொருத்தமானவனாக அவருக்கு தோன்றியுள்ளேன். அதற்கு நான் புளகாங்கிதம் அடைகிறேன். தவிர ரஜினிக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு இது, அவர் நாட்டு நடப்பு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பதால் எனக்கு வந்தது.
அதானி அம்பானிக்கு உதவியது போல் எனக்கு சில நூறு கோடிகளை கடனாக வழங்கி 20 வருடங்களுக்கு நான் படமில்லாதபோது பிசியாக இருப்பதாக காட்டிக்கொள்ள எடுத்த மருதநாயகம் படத்தை தூசி தட்டச் சொல்லியுள்ளார். இதை நேரில் நான் எலிசபெத் ராணியிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியடைந்த ராணி தான் மருதநாயகம் படத்தின் பொய்யான பூஜையில் கலந்து கொண்டதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். அகால மரணமடைந்த ஜெயலலிதா பற்றியும், ஊழல் தாத்தா கருணாநிதியின் உடல் நிலை குறித்தும் அக்கரையுடன் விசாரித்தார். மீண்டும் மருதநாயகம் படத்தின் இரண்டாவது பூஜைக்கு ஏற்பாடு செய்யுங்கள் நான் அவ்வை ஷண்முகியில் நீங்கள் கட்டியமாதிரி பட்டுப்புடவையில் வந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கிறேன் என்றார் என்று கமல் நமது நிருபரிடம் கப்ஸா விட்டார்.
There are no comments yet
Or use one of these social networks