சென்னை: தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையே பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை கடந்த மாதம் 27-ம் தேதியன்று சந்தித்தார். அப்போது, வர்தா புயல் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும். வறட்சி நிவராண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மீனவர்கள் விவகாரம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். மேலும், மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.

இந்நிலையில், தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் கப்ஸா செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜல்லிக்கட்டு அனுமதிக்கு பிரதமரிடம் நன்றி தெரிவித்துக் கொண்டேன். பசுமாடு போல தலையை ஆட்டினார். இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தினேன். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினேன். கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் நடத்திய ஜல்சா பார்ட்டியால் கஜானா காலியாக உள்ளது, சின்னம்மா அபராதம் கட்ட 10 கோடி குறைகிறது, எனவே தமிழகத்துக்கு சேர வேண்டிய, வறட்சி நிவாரணம், (வராத) வர்தா புயல் நிவாரண நிதி வழங்குமாறு கோரினேன். நீட் தேர்விலிருந்து விலக்களிக்கவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தினேன். அதேபோல், தமிழகத்தில் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றவும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். மனுஷன் செவி சாய்க்கவில்லை, அடுத்து சந்திக்கவிருக்கும் பாலிவுட் நடிகைகள் பட்டியலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் கோபமாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினேன். அப்போது அவர் கன்னத்தில் கைவைக்க பயமாக இருந்ததால், சின்னம்மா போல்வே தரையில் மூன்று முறை அறைந்து, ஜெயிலில் இருந்தே எங்கள் சின்னம்மா எங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக வழிநடத்துகிறார். தமிழகத்து உரிமைகளை நசுக்கினால் எங்கள் திராவிடத்தாய் சசிகலா கிளரந்தெழுவார். சித்தி கொடுமைன்னா என்னன்னு கேள்விப்பட்டிருக்கியா” என்று கத்திவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடியே வந்து விட்டேன் என்றார்.

பகிர்

There are no comments yet