சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஐநா சபையின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். கடந்த மார்ச் 8 அன்று மகளிர் தினத்தை முன்னிட்டு ஐநா சபையில் அவரது பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக்கண்டு பரதக் கலையில் முன்னோடியான அனிதா ரத்னம் டுவிட்டரில் “ஐநா சபையில் பரதநாட்டியத்தின் பரிதாப நிலை” என பதிவிட்டுள்ளார். அவரே பேஸ்புக்கில் ‘இது பரத நாட்டியத்தின் கேலிச்சித்திரம்’ என் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவின் கமெண்டின் பரதம் தெரிந்த பலரும் தங்களது கருத்துக்களை ஆவேசமாகப் பகிர்ந்துள்ளார்கள். ஆனால் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க சிலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு “மகளிர் தினத்தில் ஐநா சபையில் நடனமாடியதற்கு வாழ்த்துக்கள், இந்தியா உங்களை எண்ணிப் பெருமைப்படுகிறது” என்று கூறியுள்ளார். பாஜக முண்ணனி தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பெயர் வெளியிட விரும்பாத கப்ஸா நடன நிபுணர் கூறும்போது, “பரதத்த ஒழுங்குபடுத்தின ருக்மணி அருண்டேல் இன்று உயிரோடிருந்தால் கலாக்ஷேத்ரா வளாகத்தில் தூக்கு மாட்டியே செத்துருப்பாங்க, அதுக்கு முன்னாடி இந்த ஆட்டம் சதுராட்டம் என்ற பெயரில் தாசிகளும், வேசிகளும், ஜமீந்தார்கள் பணக்காரர்கள் முன்னிலையில் அந்தரங்கமாக ஆடியது, அதை அப்படியே அடி பிறழாமல் ஆடியது வரவேற்கத்தக்கது… ஒரு வேளை முன்ஜென்ம வாசனையோ என்ன கண்றாவியோ? பணம் கொடுத்து பதவியை வேண்டுமானால் வாங்கலாம், ஆனால் டூப்ளிகேட்டை நாட்டியம் ஆட வைக்க முடியாது.. இதற்கெல்லாம் காரணம் பணம் கொடுத்து நல்லவன் போல் சினிமாவில் கதை தயாரித்து ஊரை ஏமாற்றிய கலைப்போலி சம்பாதித்த பணம்தான் காரணம்..” என்று காட்டமாக தெரிவித்தார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா தனுஷ் கப்ஸா நிருபரிடம் அளித்த பேட்டி.. “என் அப்பாவிடம் பணமும் செல்வாக்கும் கொட்டிக் கிடக்கிறது, நான் நினைத்தால் ஐநாவில் என்ன ஆகாசத்தில் கூட நாட்டியம் ஆடுவேன். நான் ஆடியது பரதநாட்டியம் இல்ல, புரட்டுநாட்டியம். எதிரிகளைப் புரட்டும் நாட்டியம். கடந்த இரண்டு வாரங்களாக என் கணவர் ராமர் தனுஷின் லீலைகளை பாடகி சுசித்ராவின் டுவிட்டர் ஹேண்டிலான ‘சுச்சிலீக்ஸ்” இல் பார்த்து ஒரு சுகானுபவப் பரவச நிலையில் இருந்தேன். ஐநா சபையில் நடனம் ஆட நாள் நெருங்க நெருங்க எனக்கு ஒரு வித உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது, எனது கணவரின் சுச்சி லீக்ஸ் நடனங்கள் முடியாத தொடர்கதையாக தமன்னா, ஆண்ட்ரியா, திரிஷா என நீண்டுகொண்டே போனதால், டிப்ரஸ் ஆன நான் உள்ளக்குமுறலை கொட்டித்தீர்க்க ஐநா சபையில் நடனமாடும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஒப்பாரி நடனம் ஆடினேன், அதை பரதநாட்டியம் என்று சொல்பவர்களையும், அந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்களையும் மஹிசாசுரமத்தினி சாமி கண்ணைக் குத்திடும்” என்று ‘அப்பா’வியாக சொன்னார்.

There are no comments yet