லக்னோ: உத்தபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக அரசு இன்று பதவியேற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்றுக்கொண்டார். அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று பாஜக ஆட்சியை பிடித்தது. யோகி ஆதித்யாநாத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமாணமும், ரகசியத்தை காக்கும் பிரமாணமும் செய்து வைத்தார். யோகி ஆதித்யாநாத் முதலமைச்சராக பதவியேற்ற பின் துணை முதல்வர்களாக உத்தரபிரதேச பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியாவும், கட்சியின் தேசியத் துணை தலைவர் தினேஷ் சர்மாவும் பதவியேற்றனர். அத்துடன் 47 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். விழா முடிந்த சிறிது நேரத்திலேயே உத்தரபிரதேச தலைமைச் செயலகத்திற்குச் சென்ற யோகி ஆதித்யாநாத் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு தனது பணிகளைத் தொடங்கினார்.
இது குறித்து மகிழ்ச்சியில் இருந்த பிரதமர் மோடி கப்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆர்கே நகர் தொகுதியில் கங்கை அமரனை களம் இறக்கியுள்ளோம். மெல்ல மெல்ல பின்வாசல் வழியாக ஊடுருவி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் திட்டம் தீட்டி வருகிறேன். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜக்கி வாசுதவின் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்வேன். நித்தியானந்தா தான் முதல்வர். மேலும் தமிழகத்தி உள்ள பிரபல சாமியார்களின் லிஸ்ட் எடுக்கச் சொல்லி உள்ளேன். கோவில் போல அனைத்து அரசு கட்டிடங்களுக்கும் காவி கலர் அடிக்க உத்தரவிடுவேன். தற்போது ஜனாதிபதி இருக்கைக்கு எல்.கே.அத்வானியின் பெயர் பரிந்துரையில் உள்ளது. அதை கூட மாற்றலாம் என்று நினைக்கிறேன், ஒரு சாமியார் உ.பி. முதல்வர் ஆகும் போது யோகி பாபா ராம்தேவ் ஜனாதிபதி ஆகக் கூடாதா?”
மேலும் மோடி கூறும்போது “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை வைத்து தமிழகத்தில் காலூன்றுவற்கான முயற்சிகளை பாஜக ஆரம்பித்துவிட்டது. சாது வாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை தங்களுக்கு எதிராக மிரள வைத்ததின் பின்னணியில் நாங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றால் ஒட்டுமொத்த அதிமுகவும் பன்னீர்செல்வத்தின் கைக்கு வந்துவிடும் என்பது என் கணக்கு. ஆனால், கணிப்புகள் மாறி, எம்எல்ஏக்களை காபந்து செய்து எடப்பாடி பழனிசாமியை முதல் வராக்கிவிட்டது சின்னம்மா தரப்பு. இது எனக்கு கிடைத்த பெரிய அடி. அதற்கு பதிலடி கொடுக்கவே இரட்டை இலையை முடக்கி என் ஜிப்பா பாக்கெட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்று ‘காவி’ப்பல் தெரிய சிரித்தார்..
There are no comments yet
Or use one of these social networks