சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா அவரது பிறந்தநாளான ஜூன் 3 கொண்டாடப்பட உள்ளது. வைரவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது. இந்த முன்ஏற்பாடு பணிகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிஹார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து உருக்கமான தகவலை துரைமுருகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். துரைமுருகனின் பேஸ்புக் பதிவு.. பல ஆண்டுகளாக தனது கரகர குரலால் தமிழினத்தை ஏமாற்றி வந்த கருணாநிதியின் ”தொண்டைக்குழி” வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால் பேச இயலவில்லை… கடந்த இரு தினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேச சொன்னார்கள். தலைவரிடம் உங்கள் பெயர் என்ன எனக்கேட்க? “என் பெயர் கருணாநிதி” என்றார்.அடுத்ததாக உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க? ”அறிஞர் அண்ணா” என்றார். பின்னர் என்னை யார் எனக்கேட்க? “துரை” என்றதும், என் கண்கள் கசிந்தன… தொடர்ந்து தங்களுக்கு எத்தனை மனைவிமார், எத்தனை குழந்தைமார், அன்னாரது பெயர்களை கூறுங்கள் என்று சொல்ல, ஊழல் தாத்தாவும் முழு பட்டியலையும் சரியாக வாசித்தார்.. தாங்கள் சட்டமன்ற தலைவராக தேர்வாகை 60 ஆண்டுகாலம் நிறைவுற்றது, வைரவிழா ஏற்பாடுகள்.. என்றதுதான் தாமதம், ‘குஷ்பு’ என்றார்.

குஷியான துரைமுருகன் ஸ்டாலினை தொலைபேசியில் அழைக்க, அங்கு விரைந்த ஸ்டாலின் கப்சா நிருபரிடம் “தற்போது மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் கருணாநிதி இருப்பதால், அவர்களின் அறிவுரைப்படி செயல்பட வேண்டிய நிலையில் உள்ளார், அவர்கள் அனுமதி அளித்தால் குஷ்பு நர்ஸ் ஆக நடித்து பணியாற்ற, விழாவில் பங்கேற்பார் எனவும் கருணாநிதியின் பிறந்தநாள் விழா, வைரவிழா ஆகியவற்றை இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்கும் வகையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பகிர்

There are no comments yet