சென்னை: ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதி வருவாரா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக, வீட்டிலேயே உள்ளார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவரை சந்திக்க, வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக, குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், வரும், 17ம் தேதி, ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓட்டு அளிக்க, அவர் தலைமைச் செயலகம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியே அவர் வந்தாலும், ஜனாதிபதி தேர்தல் விதிமுறை யின் படி, அவருடன் உள்ளே யாரும் செல்ல முடியாது.உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தான், அவருக்கு ஓட்டளிக்க உதவ முடியும். எனவே, அவர் ஓட்டளிக்க வருவது சிரமம் என்றே கூறப்படுகிறது. தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.எனவே, ஜனாதிபதி தேர்தலில், 233 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க முடியும். கருணாநிதி வராவிட்டால், 232 பேர் மட்டுமே ஓட்டளிக்க வாய்ப்புண்டு.

இந்நிலையில் இன்று கோபாலபுரம் இல்லம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் மீராகுமார். அப்போது கருணாநிதியின் உடல் நலம் குறிதது மீராகுமார் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது ஸ்டாலின், கனிமொழி, திருநாவுக்கரசர், துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது என் ஓட்டு உங்களுக்கே என்று மீராகுமாரின் கையிலடித்து சத்தியம் செய்ததாகவும், தன்னால் தனியாக வந்து வாக்களிக்க முடியாததால் டெலிபதி மூலம் வாக்களிப்பேன் என்று உறுதியளித்ததாகவும் கோபாலபுரத்தில் இருந்து வரும் நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet