ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியலில் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து வாக்குசாவடிகளும் பதட்டமானவையாக அறிவிக்கப் பட்டுள்ளதால் கண்காணிப்பு கேமரா பொருத்தப் படுகிறது. அந்த தொகுதியை சாராதவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் வகையில் இந்த முறை வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 9 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் தொகுதிக்கு வந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் ஒரு சில நாட்களில் தேர்தல் பணியில் இறங்குகிறார்கள். நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் கெடுபிடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிவகுமார் 4 பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், மற்றும் வங்கி அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேர்தலை அமைதியான முறையில் சுமூகமாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பணப்பட்டுவாடாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. வங்கிகளில் பெரும்தொகை மொத்தமாக எடுப்பவர்கள் பற்றிய விவரங்களையும், அதற்கான காரணத்தையும் வங்கி அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய ஆசிரியர்கள் குறித்த விவரங்களை முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும் தேர்தலில் அனைவரும் வாக்காளிக்க முன்வரவேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா மூலம் அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் கணக்கெடுப்பின்படி 23 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. இதுதவிர கார், ஆட்டோ, சுற்றுலா பயன்பாட்டு வாகனங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு ஓரிரு நாட்களில் ‘ஸ்டிக்கர்’ வழங்கவும், அதனை வாகன உரிமையாளர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகள் வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாகனங்களுக்கு மட்டும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படுவதால் மற்ற மாவட்ட வாகனங்கள் எவை என்பதை தெளிவாக கண்காணிக்க முடியும். இதன் மூலமும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது. இது ஒருபுறமிருக்க, ஆர்கே நகரில் முன்னெச்சரிக்கையாக 69 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கப்சா காவல அதிகாரி கூறியதாவது: ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் பணியில் உள்ள முன்னாள் ரவுடிகளன சந்திரலேகா மீது ஆசிட் வீசிய மதுசூதனன், கட்டப்பஞ்சாயத்து புகழ் ஸ்டாலின் உள்ளிட்ட பிரபல ரவுடிகளை தவிர்த்து சில்லறை ரவுடிகளை கைது செய்துள்ளோம். இவர்கள் மோடியின் டிஜிடல் இந்தியா திட்டத்தின்படி, ‘பேடிஎம்’ ‘ஃப்ரீசார்ஜ்’ ‘ஏர்டல்மணி’ போன்ற ஆப்புகளின் மூலம் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்தனர். இவர்களது செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. விஷாலுக்கு ஆதரவாக திரையுலகினர் ரசிகர்கள் திரண்டு வந்து வாக்கு சேகரித்தால் ‘வெடி’ போட்டு கூட்டத்தை கலைப்போம். அதாவது பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடித்த ஓடாத படமான ‘வெடி’ படத்தை பொதுவெளியில் திரையிடுவோம், கூட்டம் காணாமல் போயிடும்” என்று சிரித்தார்.
பகிர்