
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் ரிட்டயர்டு ரவுடி மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மானங்கெட்ட மருதுகணேஷ், சின்னமில்லாத சின்னபுத்தி டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடைசி நாளன்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நாளீல் மட்டும் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்து.
அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் விதம், விதமாக வந்து தேர்தல் அலுவலக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் படிவம் B-ல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கையெழுத்து இட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டன. விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்க அ.தி.முகவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது. பின்னர் பல டிராமாக்களுக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டது.

படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. என தெரியவந்து உள்ளது. ஏற்கனவே முன்னதாக பேட்டி அளித்து தீபா தனது வேட்புமனு நிராகரிக்கப்படும் என கூறி இருந்தார். இது குறித்து தலைவி(ரி) கோலத்தில் புது லுக்கில் தெறிக்கவிட்ட தீபா கூறியதாவது:- நான் ஏற்கனவே இது குறித்து கூறி இருந்தேன் எனக்கு போன் மூலம் மிரட்டல் வந்தது. நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்யாதீர்கள் செய்தாலும் நிராகரிக்கப்படும் என் 2 நாட்களுக்கு முன்னரே என்னிடம் கூறினார்கள். அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் எனக்கு அழைப்பு வந்தது. நீங்கள் போட்டியிடாதீர்கள், அப்படி போட்டியிடாமல் இருந்தால் நாம் வேறு முறையில் அதை சமரசம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். கடந்த முறை கூட எனக்கு இது போன்ற பல மிரட்டல்கள் வந்துள்ளன. என் மீது ஆசிட் வீசுவேன் என்றெல்லாம் கொலை மிரட்டல் கூட விடுத்தார்கள். ஆர்கே நகர் மக்களுக்கு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அத்தையை பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது. என்னுடைய வாக்கு வங்கி அதிமுகவை பாதிக்கும் என்பதால் திட்டமிட்டு நான் போட்டியிடக் கூடாது என்று இப்படி ஒரு தேவையில்லாத காரணத்தை சொல்லி மனுவை நிராகரித்துள்ளனர் என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போதே எனக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தது.

நான் பருமனாக இருப்பதால் சின்ன வாசலுக்குள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்பட்டது. அதுபோக என கணவர் பெயர் நிரப்ப வேண்டிய இடத்தில் என் டிரைவர் ராஜா பெயரை நிரப்பி இருந்தேன். அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். நான் போயஸ் தோட்ட இல்லத்தை முற்றுகையிட்டபோது, எனக்காக பரிந்து பேசி வாயில் சொல்லமுடியாத வார்த்தைகளால் மற்றவர்களை திட்டி என்னை காபந்து பண்ணியவர் என் டிரைவர் ராஜா. அதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக அவர் பெயரை படிவத்தில் நிரப்பி இருந்தேன்..” என குழந்தைத்தனமாக கூறினார்.