ஸ்ரீவில்லிபுத்துார்:கவிஞர் வைரமுத்து நேரில் மன்னிப்பு கேட்காததால் இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.ஆண்டாளை தவறாக பேசிய கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலுக்கு வந்து நேரில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்தவாரம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஜீயர் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. அப்போது ஜன.16க்குள் ஆண்டாள் கோவிலுக்கு நேரில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும் என தெரிவித்திருந்தார். அதுபோல் தற்போது வரை வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்கததால், இன்று காலை 9 மணி முதல்ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் மடத்தில் உண்ணாவிரதம் இருக்கபோவதாகசடகோபராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆண்டாள் தேவதாசிதான் என்ற ஆதாரங்களை வெளியிட்டார் வைரமுத்து. இதனால் – உண்ணாவிரதம் இருந்த ஜீயர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.