Papanasam Movie New Stills
ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதுபோல் கமல்ஹாசனோ வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கட்சியை தொடங்கவுள்ளார். இது தெரிந்த செய்தி. கமலுடன் 13 வருட லிவிங்-டுகெதரில் இருந்தவர் கவுதமி. ஸ்ருதி ஹாசனுடன் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மோதலால், கமலை பிரிந்த நடிகை கவுதமி ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தைரியமாக முன்னெடுத்து சென்றவர். டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மனித மலம் வரை தின்று நாறிக் கொண்டிருக்க, நடிகளை சந்திப்பதில் ஆர்வம் காட்டும் மோடியை சுலபமாக நேரில் சென்று சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் கமல் படங்களுக்கு ‘ஆப்படிக்க’ சென்சார் போர்டில் பதவியை கேட்டுப் பெற்று விஸ்வரூபம் எடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆண்டாள் தேவதாசி பிரச்சினையில் அமைதி காத்த கவுதமி திடீரென்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்தார். ‘சோடாகோப’ ராமானுஜ ஜீயரை சந்தித்து ஆதரவு தெரிவித்த கவுதமி, சுவாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். கவுதமி கூறுகையில், “ஆண்டாள் போலவே திருமணம் செய்து கொள்ளாமல் கமலுடன் லிவிங்-டுகெதரில் கலக்கினேன். அதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தரிசனத்திற்க்கு வந்துள்ளதால் நான் பிஜேபி என்று கண்டுபிடித்துவிட்டார்கள். வைரமுத்துவை பற்றி கேள்வி கேட்பார்கள் ஏதாவது கூறி பப்ளிசிட்டி தேடிக்கொள்ளலாம் என்று வந்தேன். வழக்கம் போல் கமல் ரஜினி கட்சியை பற்றி கேட்டு வெறுப்பு ஏற்றி விட்டார்கள். கமல் அரசியலில் குதிப்பதற்கு அவரது ஈகோவை கிளறி விட்ட நானும் ஒரு காரணம். பிஜேபி ரஜினியை முதல்வர் ஆக்க ஜெ இறந்தவுடன் காய் நகர்த்த ஆரம்பித்து விட்டது. ரஜினிக்கு பக்கபலமாக பாஜக ஆள் சேர்க்கிறார்கள். இதை மோடிஜி என்னிடம் சொன்னார். கமல், ரஜினி கட்சிகளுக்கு நான் ஆதரவு இல்லை. கமல், ரஜினி கொள்கைகளை அறிவித்த பின்னர் ஆதரவு யாருக்கு என தெரிவிப்பேன்” என்றார் கவுதமி.
“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதையும், கட்சி கொள்கைகளை விளக்க வேண்டும். அவர்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை முதலில் வெளியிடட்டும். குரு சிஷ்யன் திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க வாய்ப்புக் கொடுத்து என் வாழ்க்கையில் குத்து விளக்கு ஏற்றி விட்டார் ரஜினி, பின்னர் மார்க்கெட் இழந்தவுடன் வழக்கம்போல் தொழிலதிபர் கணவரை கைபிடித்தன். அவர் கைவிட்டதால் லிவிங் டுகெதரில் வாய்ப்புக் கொடுத்த கமலுடன் ரகசியமாக குடும்பம் நடத்தினேன். பிரேக் அப்பின் போது என் மகள் வாழ்க்கை சினிமாவில் சிறப்பாக அமைய வேண்டும் என்பதால் கமல் பெயரை பகிரங்கமாக யூஸ் பண்ணிக் கொண்டேன், அதனால், தனுஷ் பட வாய்ப்பு என் மகளுக்கு கிடைத்ததுள்ளது. சினிமா வாய்ப்பளித்த ரஜினிக்கா, லிவிங்-டுகெதரில் வாழ்வளித்த கமலுக்கா யாருக்குஆதரவு அளிப்பது” என ஒரே யோசனையாக உள்ளது. என்றார்.
பகிர்