சவுந்தர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் அஸ்வினுக்கு 2வது திருமணம் நடந்துவிட்டது என்று கூறி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், அவரின் காதலர் அஸ்வின் ராம்குமாருக்கும் பெரியோர்கள் சம்மதத்துடன் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2015ம் ஆண்டு சவுந்தர்யா வேத் என்ற மகனை பெற்றெடுத்தார். மகன் பிறந்த சில மாதங்களில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் குடும்பநல நீதிமன்றத்தை அணுகி ‘சிஸ்டப்படி’ விவாகரத்து பெற்றனர். சவுந்தர்யா அப்பா, அம்மாவுடன் வாழாவெட்டியாக தங்கி கோச்சடையான் போன்ற டப்பா பொம்மைப் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

பின்னர் சென்சார் போடுக்கு விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை சரிபார்த்து பரிந்துரை மட்டுமே செய்கிறேன் என்று தப்பித்தார். இந்த நிலையில் எப்படி சிம்பு காதலித்து கழற்றிவிட்ட பெரியமகளுக்கு தனுஷை ‘செட்டிங்’ செயதாரோ அதே போல் இளைய மகளுக்கு ஒரு புது அடிமை மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஆசிரம் பள்ளியில் உள்ள பிரின்சிபால் முதல் பியூன் வரை வலை வீசி தேடியுள்ளார் ரஜினியின் மனைவி வாடகை தராத தவப்புதல்வி லதா ரஜினி. தனது படங்கள் ஓடுவதற்காக ஒரு டுபாக்கூர் அமைப்பினை ஆரம்பித்து, “சிஸ்டம் சரியில்லை, ஓரே கஸ்டமாக இருக்கிறது, ஒரு நிமிசம் தலை சுத்திருச்சி” என்று காமெடி டயலாக்குகலை அள்ளி விடும் ரஜினி, வீட்டில் சிஸ்டம் சரியில்லாததால் மறந்திருந்த இமயமலைக்கு சென்றுள்ளதாகவும் அங்கு வாடகை தராமல் குதிரை சவாரி செய்ததாகவும், கப்சா நிருபர் தெரிவிக்கிறார்.