சுவற்றை கைப்பற்ற மெட்ராஸ். நிலத்தையே கைப்பற்ற மும்பை. நில அதிகாரம் எனும் ஒன் லைனை வைத்துக்கொண்டு தாராவி முதல் தமிழீழம் வரைக்குமான அரசியலைப் பேசியிருக்கிறார் ‘டுபாக்கூர் சின்ன திருமா’ ரஞ்சித். பலமுறை பார்த்து சலித்த குப்பத்து ராசா கதை. பல படங்களில் பார்த்துச் சலித்த திரைக்கதை. இடம் மட்டும் மும்பை சேரி தாராவி. “கியா ரே செட்டிங்கா, வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்… தில்லிருந்தா வாங்கலே….” என்கிற மாஸான வசனம் டிரெய்லரில் தூள் பறக்க ஆவலுடன் படத்தில் எப்படி இருக்குமோ என எதிர்ப்பார்ப்பு எகிற, படத்தில் அந்த வசனத்துக்குப்பின் சப்பென்று போகிறது காட்சியும், மீதி மொத்தப்படமும். அப்பாவி சிறுவன் கொல்லப்படுகிறான், ஒரு சண்டைக்காட்சி கூட இல்லை. இதேப்போல் ஆங்காங்கே மாஸான வசனத்திற்க்குப்பின் படத்தில் அதற்கேற்ற நச் காட்சிகள் இல்லை, சூப்பர்ஸ்டாரும் இல்லை. பின்னணி இசை இன்னும் சிறப்பாய் வந்திருக்கலாம், இரு பாடலைத்தவிற மற்றவை சுத்தம். மெட்ராஸிலிருந்து தொடரும் அந்த குரூப் நடனக்காரர்களின் டெம்ப்ளேட் நடனமும் சீரியஸ் காட்சிகளில் அவர்கள் ராகமும் எரிச்சல்.
பிரடிக்டபிள் கதை, இண்ட்டரஸ்ட்டிங் காட்சிகள் இல்லாதது கதையை மிக தொய்வாய் நகர்த்துகிறது. சமுத்திரக்கனியின் கேரக்டர், குடியுடன் பேசும் வசனங்கள், நக்கல்கள், அட்வைஸ்கள் அலுப்பு. ‘ஒற்றே அடி’ கொடுத்து அனுப்பிவிடலாமா என்று எரிச்சலாக வருகிறது. மிக முக்கியமாய் மும்பை சேரியில் அதிகம் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களின் பேச்சில் ஹிந்தி சரளமாய் வந்து விழும். இந்தப்படத்தில் ஹிந்திக்காரன் கூட தமிழ் பேசி சாவடிக்கிறான். ரெண்டு மூன்று ஹிந்தி வார்த்தைகள் மட்டும் யூஸ் செய்கிறார்கள். தமிழனாக இருந்து கொண்டு தமிழர்களுக்காக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று சின்ன திருமா ரஞ்சித், மலேசிய மக்களுக்காக கபாலி எடுத்தது போல் நானா படேகர், ஹூமா குரேஷி போன்றோரை வைத்து ஹிந்தி பிசினஸ் செய்ய ஹிந்தி வார்த்தையான ‘காலா’ என்ற டைட்டிலை வைத்துக் கொண்டு பிசினஸ் செய்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளிலும், படத்திலும் பழைய ரஜினியும் அந்த ஃபோர்ஸும் மிஸ்ஸிங். கிழடு தட்டிவிட்டதல்லவா?
பல இடங்களில் ரஜினியை டம்மியாகவே காட்டி இருக்கிறார் ரஞ்சித். குறிப்பாக அறிமுக காட்சியில் கிளீன் போல்டாவது. ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக போரபோராடும் தலைவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் வழி ரவுடியிசமாகவும், வன்முறயாக இருப்பதும் சரிதானா சின்ன திருமா ரஞ்சித்? அப்பத்தானே சண்டைக்காட்சி விறுவிறுப்பாகவும் ரத்தக்களறி பிசுபிசுப்பாகவும் இருக்கும் என்கிறீர்களா? தன் வீட்டிற்கு வரும் காலாவிற்கு தன் பேத்தி கையால் தண்ணீர் கொடுத்து அவளை அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறச் சொல்லும் ஹரி ,காலா வீட்டில் தண்ணீர் குடிக்காமல் தீண்டாமை கடை பிடித்தது முரண் .ஹரி தன் வீட்டிற்குள் காலாவை தோளில் கை போட்டு அழைத்து செல்ல, காலா ஹரியை வெளியே உட்கார வைத்து பேசுவது இன்னொரு முரண். வில்லனிடம் அதே பழைய பாணி தந்திரங்கள், புதிதாய் ஒன்றும் இல்லை. கருப்பு நிறத்தை மட்டும் வைத்து எடுக்க வேண்டிய கிளைமாக்சில் படம் பூரா இந்துத்துவ கும்பலுக்கு எதிராக பேசிவிட்டு அவர்களது ஹோலி பண்டிகையை தூக்கிப் பிடிக்கும் சப்பென்ற கிளைமாக்ஸ்.
தாராவி செட் என்ற பெயரில் குப்பை கூளத்தை அள்ளிக் கொண்டு வந்து செட் போடுவது எளிது. பின்னர் வரும் காட்சிகளில் மொத்தமாக எரித்து விடுகிறார்கள். ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனியே காலியாகி விட்டிருக்கும் போலிருக்கிறது. 785166 முறை தாராவி என்ற ஏரியாவை டாப் ஆங்கிளில் காட்டுகிறார்கள். அலுப்பு தட்டுகிறது. பெட்ரோல் விற்கிற விலையில் கிளைமாக்ஸ் காட்சியில் கொளுத்து கொளுத்து என்று கொளுத்துகிறார்கள். எங்கும் பற்றி எரிகிறது. 120 ரூபாய் கொடுத்து டிக்கெட்  வாங்கிய வயோதிக ரசிகனின் வயிறும் சேர்த்து. இடையில் வரும் பிளாஸ்பேக் அனிமேஷன் காட்சிகள் கடுப்பேற்றுகின்றன. இந்த போர்ஷனில் தனுஷ் நடிக்க் அடம் பிடித்ததாகவும், ரஞ்சித் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஆரம்பத்தில் செய்திகள் அடிபட்டன. பேசாமல் ரஜினியாக தனுஷே நடித்திருக்கலாம், சுருங்கிப்பொன முகமும் கழுத்தும், சுண்டிப்போன நரம்புகளும் பார்க்க சகிக்கவில்லை, ரஜினி சார் பெட்டர் ரிட்டையர்.
ஈஸ்வரி ராவ் முதல் இரண்டு காட்சிகளில் நாடகத்தன்மை இருந்தாலும் பின்னர் பின்னி பெடலெடுக்கிறார். பல இடங்களில் வசனங்கள் ஷார்ப். ரஞ்சித்தின் ‘சின்ன திருமா’த்தன கோபம் தெரிகிறது. ஆனால் சமீபத்ய தூத்துக்குடி மற்றும் அரசியல்  பேச்சு செயல்களால் ரஜினிக்கு இந்த வசனங்கள் செட் ஆகவில்லை. நிஜ ரஜினிக்கும் திரை ரஜினிக்கும் நூறு சதம் வித்தியாசம் தெரிகிறது. முதல் மரியாதை ‘பூங்காத்து திரும்புமா’ பாடலை நினைவு படுத்தும் கண்ணம்மா பாடல், வாடி என் தங்கச்சில பாடல், பழைய காதலியை சந்திக்கும் காட்சிகள் ரப்பர் ரகம். மோடி வேடத்தில் நானா படேகர் வாழ்ந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் ரஜினியின் ஸ்டைலும், நடிப்பும், மேனரிசமும் எரிச்சலூட்டுகிறது. ரஜினி போதும் என்றாகி விட்டது. இப்படத்தில் சொல்லப்பட்ட அரசியலும், எடுக்கப்பட்ட கருத்துக்கும், பேசப்பட்ட வசனங்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலுக்கும் சின்னத் திருமா ரஞ்சித்தை அர்ச்சித்தே ஆகவேண்டும். மறுபடியும் இப்படி ஒரு படம் எடுக்க கூடாது என்று. மொத்தத்தில் காலா மணிரத்னத்தின் நாயகனுக்கு பலபடி கீழும், காட்பாதருக்கு 10000 அடி அதள பாதாளத்திலும். சிவாஜி கணேசனின் முதல் மரியாதைக்கு மண்டியிட்டும் கிடக்கிறது. ரஞ்சித் படத்தில் ரஜினி மிளிரவில்லை, ரஜினி கிடைத்தும் ரஞ்சித் ஒளிரவில்லை.
ஆரம்ப காட்சியில் பாகுபலி பாதிப்பு தெரிகிறது, அந்த அளவுக்கு செலவு செய்ய முடியாது என்பதால், அனிமேஷன் காட்சிகளாக திரையில் நில அதிகாரம் பற்றிய டாகுமெண்டரி ஓடுகிறது. நடு நடுவே ரோட்டில் படுத்திருக்கும் பிச்சைக்காரன், அழுக்கேறிய வீடுகள், வாகன நெரிசல் என ஸ்டாக் புட்டேஜ்கள் கடுப்பேற்றுகின்றன. கதை யை விஷுவலாக நகர்த்தாமல், சின்ன குழந்தைகள் கார்டூனாக காண்பித்து  ரூயாயை தண்டம் செய்கிறார்கள். திரைக்கதையில் நிறையவே போதாமைகள் இருக்கின்றன. ஆனால் இதில் ரஞ்சித் பேசும் அரசியல் மிகத் துடுக்குத்தனமான் மற்றும் தவிர்க்க வேண்டிய ஒன்று. அதுவும் சென்னையின் பூர்வ குடிகள் ஒருபுறம் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மிகச் சரியாக இந்த திரைப்படம் வந்துள்ளது. இது முன்பே திமுக ஆட்சியில் அடிபட்ட சிங்காரச் சென்னை திட்டத்தை ஏளனம் செய்கிறது.
வணிக சினிமாவாகவும் இல்லாமல், சாதி போற்றும் சினிமாவாகவும் இல்லாமல், தான் கொண்ட ஒற்றை நோக்கம் குறித்து மட்டுமே கதையை நகர்த்திச் சென்ற சமரசமில்லாத இப்படி ஓர் உப்பு சப்பில்லாத இயக்குநரை சமகாலத்தில் பார்த்ததில்லை. மொத்தத்தில் தூத்துக்குடியில் யார் நீ என ரஜினியை கேட்ட இளைஞரை பாராட்ட வேண்டும். ஏய் ரஜினி, நீ அரசியல் பண்றியா, சரி மோடிய விமரிசித்து விட்டுப் போ, பாஜகவ நக்கல் அடி இல்ல நாற அடி அதகூட அரசியல் சாதுர்யம்னு ஏற்றுக் கொள்கிறோம், அத விட்டுட்டு உன் ரெண்டு பொண்ணையும் வச்சிருக்கிற ஒரு தறுதலை தயாரிக்கிறான். ஒரு தரை டிக்கெட்டு டைரக்டு பண்றான்னு இந்த ரெண்டு நாய்ங்க பேச்சை கேட்டு இந்துக்கள் வணங்குற கடவுளை ஏளனப்படுத்த உனக்கு என்ன திமிரு? உன்னை மாதிரி காசுக்காக பக்தி வேஷம் போடுற ஆள் இல்லை நாங்க. ஏண்டா கிழட்டு கபோதி தெரியாமத்தான் கேக்குறேன் இமயமலைக்கு நீ போறதெல்லாம் யாருக்கும் தெரியாம கஞ்சா அடிக்கத்தானே? என்று ஒரு பேக்புக் குஞ்சு கதறுகிறது.
சினிமாவில் போராட்டத்திற்கு ஆதரவு, உண்மையில் போராட்டத்திற்கு எதிர்ப்பு என்று இரட்டை வேடம் போடுகிறார் ரஜினி என்கிறார்கள். ஆனால் அந்த காலம் தொடங்கி இன்றுவரை “நான் அடிச்சா நீ செத்துருவ! தாய் கிட்ட குடிச்ச பாலை கக்கிருவ” என்று சினிமா வாழ்க்கையிலும், இரட்டை வேடம் போடுபவர் ரஜினி என்பது திண்ணம். வேதாந்தா ஸ்டெர்லைட்டின் அடியாள் ரஜினி என்பது நிரூபணம். வேதாந்தா இயக்குனர்களின் ஒருவர்தான் நரேஷ் சந்திரா ஈராஸ் இண்டர்னேஷனலில் சேர்மனாக இருந்தவர். சவுந்தர்யா ரஜினி இவருடன் இயக்குனராக பணியாற்றியவர். கோச்சடையான் படத்தை ஈராஸ் இண்டர்னேஷனல் தான் வெளியிட்டது. “தமிழகம் தொடர்ந்த போராட்ட பூமியாக இருந்தால் யாரும் தொழில் தொடங்க வரமாட்டார்கள். ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியவர்களை ரஜினிகாந்த் சமூக விரோதி”ன்னு ரஜினி சொன்னது ஏன்னு இப்ப புரியுதா? மணிரத்னம், அவரது பார்வையில் ஒரு ராமாயணக்கதையை சொன்னார். ரஞ்சித், அவரது பார்வையில் ஒரு ராமாயணக்கதையை சொன்னார். எடப்பாடி பழனிசாமியும் சேக்கிழார் எழுதிய ஒரு ராமாயணக்கதையை அவரது பார்வையில் சொல்ல வந்தார். அது என்னவென்பதை கேட்காமலேயே அவரைப் புறக்கணித்து விட்டது இச்சமூகம்.
ப்ரோ, சேரிகளை கையகப்படுத்த வேண்டாம்னு படம் சொல்லுது. அப்போ சேரி மக்கள் சேரியிலேயே இருக்கணும்ங்கிறீங்களா? அதுதான் இதுக்கு தீர்வா? சேரியிலேயே இருக்கணும்ங்கிறதுதான் தீர்வுனு சொல்ல வரலை. ஆனா தீர்வுன்னு சொல்லிட்டு நீங்க கொண்டுவர்ற திட்டம் அதுக்கு தீர்வாகாதுனுதான் சொல்ல வர்றாங்க. சொம்புல கொடுத்த தண்ணியைக்கூட குடிக்க மறுக்கும் உங்க மனசுல உள்ள அசுத்தத்தைவிட, நீங்க சுத்தம் பண்ண நினைக்கிற சேரி அசுத்தம் அதிகம் தான். அதாவது 2019ல் நடிகர் கார்த்தி, தான் சார்ந்த சமூகம் சார்பாகக் கட்சி ஆரம்பித்து சக சமூக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தரப்போகிறார். NGK பட போஸ்டரில் சேகுவேரா போல போஸ் கொடுத்திருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குகளையும் கார்த்தியின் அண்ணன் சூர்யா இவருக்கு வாங்கித்தருவார். மகாபாரதம், ராமாயணம் என பிசி மோடில் இருக்கும் சிவகுமாரும் இந்துத்துவ வாக்குகளை இவருக்குக் கவர்ந்து தருவார். அண்ணி நக்மா காங்கிரசில் இருப்பதால் காங்கிரஸ் கட்சியையும் அப்படியே எளிதாகக் கூட்டணிக்கு இழுத்து வந்து விடுவார். ஆக, கார்த்தி-எடப்பாடி-கம்யூனிஸ்ட்-பாஜக-காங்கிரஸ் ஆகியவை அடங்கிய ஒரு மெகா கூட்டணி அமையும். கிட்டத்தட்ட அத்தனை கட்சியுமே இதில் வந்துவிடுவதால் இந்தக் கூட்டணியே போட்டியின்றி வெற்றிபெற வாய்ப்புள்ளது. எனவே கார்த்தி கட்சி ஆரம்பிக்கப்போகும் இந்த விஷயம் தெரிந்துதான், மெட்ராஸ் படத்தில் கார்த்தியை நடிக்க வைத்தார் ரஞ்சித். ஆகவே ரஞ்சித்தும் ஒரு காவியின் கைக்கூலிதான். இந்த விஷயம் உங்களில் எத்தினி பேருக்கு தெரியும்? பின்குறிப்பு: 2045ல் நடிகர் அட்டக்கத்தி தினேஷும் கட்சி ஆரம்பிக்கப்போகிறார். இந்த விஷயம் தெரிந்துதான் ரஞ்சித் அவரை வைத்து முதல் படம் இயக்கினார் எனும் விஷயமும் உங்களில் எத்தினி பேருக்கு தெரியும்?
‘தட்டையான சிந்தனை தட்டையான சிந்தனை’ என்று இலக்கியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள் அதற்கு இப்பம் அர்த்தம் தெரிஞ்சதுல்லா? தமிழ் சினிமாவில் கமல் என்னென்ன ஜானரில் படம் செய்கிறாரோ அதற்குப் போட்டியாக ரஜினியும் செய்வார். அவர் ஒரு கலைப்படம் நடித்தால் இவரும் நடிப்பார். அவர் ஒரு சை- ஃபை படம் நடித்தால் இவரும் நடிப்பார். இந்த வரிசையில் கமல் கடைசியாக உத்தம வில்லன் படத்தினில் ஆட்டோ பயோ பிக் எனும் புதிய கதை சொல்லலை தமிழில் அறிமுகம் செய்தார். இந்தியாவிலேயே அதுபோல் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. அதாவது தனது சுயசரிதையைத் தானே எழுதி அதில் தானே நடிப்பதுதான் இந்த வகை ஜானர். காலாவில் கமலின் அந்தவகை ஜானரை பீட் செய்து புதிதாக எதையாவது செய்யவேண்டும் என ரஜினி நினைத்திருப்பார் போல, ஆனால், தனது சமகால நிஜப் பாத்திரத்திற்கு எதிராகவே சமகாலத்தில் ஒருபடத்தில் நடிக்கும் இந்த வகை ஜானருக்கு என்ன பெயர் வைப்பதென தெரியாமல் உலக சினிமாவே திணறிப்போயிருப்பது ஒரு துன்பியல் கையறுநிலை.
ரஜினியின் அரசியல் வருகையில் பலருக்கும் உடன்பாடு இல்லை. ஆனாலும் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதாவது, போராட்டங்களில் ரஜினிக்கு ஈடுபாடு இல்லையென்பது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் தூத்துக்குடி விவகாரம் பற்றி, “அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இம்மாதிரியான போராட்டங்கள் வருங்காலங்களில் தொடரக்கூடாது” என ரஜினி சொன்ன குறிப்பிட்ட இந்தக் கருத்தை, “வருங்காலத்தில் போராடக்கூடாது “என ரஜினி சொல்ல வருகிறாரென்று ஒரு கோணத்தில் மட்டுமே அனுமானித்து அவருக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவது சரியாக இருக்குமா எனத்தெரியவில்லை. மக்கள் பலரும் அரசின் மேல் கடுப்பில் உள்ளனர். போராடுவோம் எனும் கருத்தை வலியுறுத்தி ஒருபக்கம் காலா ட்ரைலர் விடுகிறோம் இந்த சூழலில் போராடக்கூடாது எனும் கருத்தை இன்னொரு பக்கம் பரப்பக்கூடாது, மீம்ஸ்கள் பறக்கும் எனும் விஷயத்தில் ரஜினி மிகக்கவனமாக இருந்திருப்பாரென்பதை உணர முடிகிறது. அதன்படி பார்த்தால், அந்த ஆடியோவில், “இப்படி ஒரு கொடூரமான சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது” எனும் வெகுஜன மக்கள் சொல்லும் பொதுவான கருத்தைத்தான் சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து நிரப்பாமல் ரஜினி சொல்லியிருக்கிறார் எனத் தெரிகிறது.  ஒட்டுமொத்தமாக, #காலா-வை குறியீட்டுக் கோணத்தில் நோக்கும்போது இலங்கைத் தமிழர் போராட்டத்தையும், அதற்குத் தலைமை தாங்கிய பிரபாகரனையும் ‘தமிழ்த்திரை மொழி’யில் களம் மாற்றிக் காண்பிக்கப்பட்டுள்ளதாக நம்புவதே என் முட்டாள் பார்வை.
(நன்றி சில பேஸ்புக் பதிவர்கள்)
பகிர்