கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.
பல திடுக்கிடும் கொலைகளும் அரங்கேறின. கம்ப்யூட்டர் இஞ்சினியர் உட்பட தன்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
இதை மறைப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் சயான், மற்றொரு குற்றவாளி மனோஜ், தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் வீடியோ பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
கொடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன் இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் (ஸ்டாலின்) இருப்பதாக கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடநாடு கொள்ளை விவகாரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. அப்போதே நாங்கள் கொடநாடு எஸ்டேட் ஆதாரங்களை அழித்து விட்டோம். பீரோவை பூட்டி சாவியை அருகில் இருந்த மலக்காட்டில் வீசிவிட்டோம்.
தற்போது இதனை எதிர்கட்சிகள் மீண்டும் எழுப்புகின்றன பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும். அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. கொடநாடு விவகாரம் குறித்து ஆதாரம் இருந்தால் போலீசிடம் வழங்கலாம். ஆனால் போலீசே எங்களிடம் தான் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். தேர்தல் வரும் போது எதுவும் நடக்கலாம் இன்னும் பல டெர்ரரான சம்பவங்களுக்கு காத்திருங்கள், என கூறினார்.