பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்க்கு சனிக்கிழமை சென்றிருந்தார். அங்குள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு குகையில் தங்கினார்.
மோடி குகைக்குள் அமர்ந்து தியானம் செய்வதாகக் கூறப்பட்டது. அவர் தியானத்தைத் தொடங்கிய பின் ஊடகத்தினர் உட்பட யாருக்கும் குகையில் அனுமதி இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால், திட்டப்படி வைரலாக்க, மோடி தியானம் செய்யும் போஸில் எடுக்க்ப்பட்ட படங்கள் வெளியாகின.
அந்தக் குகையில் மோடிக்கு பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மோடி தியானம் செய்ய பல வசதிகள் கொண்ட குகைக்குச் செல்வது ஏன் என சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றிலிருந்து இன்று காலை வலை 15 மணி நேரம் மோடி அந்த குகையில் ‘தியானம்’ செய்துள்ளார் எனத் தகவல் கிடைக்கிறது. இந்நிலையில், பலரும் நினைப்பது போல அந்தக் குகையில் மோடி தியானம் செய்யப்போகிறார் என்பதற்காக புதிதாக வசதிகள் செய்யப்படவில்லை என நம்பவைக்கப்படுகிறது.
ஏற்கெனவே கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் என்ற அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட சொகுசு வசதிகள் கொண்ட குகைகள் அங்கே உள்ளன. ருத்ரா குகை எனப்படும் இவற்றில் தங்க நாள் ஒன்றுக்கு ரூ.990 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த குகை வாடகைத் திட்டத்திற்கு முதலில் ஒரு நாளுக்கு 3000 ரூபாய் வாடகை இருந்தது. ஆனால் கடந்த ஓராண்டில் இதனை பயன்படுத்துவோர் அரிதாகவே அங்கு வந்தனர் என்பதால் வாடகை குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்பு இந்த குகையில் தங்க குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு சேர்த்து புக் செய்ய வேண்டும். ஆனால், இப்போது ஒரே நாள் மட்டும்கூட ருத்ரா குகையில் தங்கலாம்.
இந்த சொகுசு குகையில் தங்கி தியானம் செய்ய ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு. குகையில் மெத்தை, போர்வை, குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் போன், போன்ற வசதிகள் உள்ளன. மூன்று வேளை உணவும் இரண்டு வேளை டீயும் குகைக்கே வந்து கொடுக்கப்படும். எந்த நேரத்தில் அவற்றை பெற வேண்டும் என்பதும் தங்குபவரின் விருப்பம்தான்.
பனிமலைப் பிரதேசம் என்பதால் தொலைத்தொடர்பு வசதிகள் அதிகம் இல்லை. ஆனால், ஏதாவது உதவி தேவைப்பட்டால் அழைக்க குகையில் ஒரு பெல் உள்ளது. அந்த பெல் அடித்ததும் ஓடிவந்து உதவ 24 மணிநேர உதவியாளர் இருப்பார். அதற்கும் மேல் அவசர உதவிக்காக ஒரு டெலிபோனும் உள்ளது.
இந்த ருத்ரா குகையை அமைக்க ஐடியா கொடுத்தவர் மோடிதான் என்றும் அவரே வந்து ஒரு நாள் தங்கியதால் குகைக்கு வருபவர்கள் அதிகரிப்பராகள் எனவும் கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் அமைப்பினர் நம்புகின்றனர்.
‘சகல’ வசதிகளும் உள்ள குகை என்பதால், இந்த குகை திட்டத்திற்கு ‘சொர்க்கபுரி’ லாட்ஜ் ‘ராஜசுகம் காட்டேஜ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. சகல வசதிகளும் என்றால் மோடி ஆட்சி பிடிக்காதவர்கள் தற்கொலை செய்து கொள்ள ஏதுவாக தூக்கு கயிறு + ஸ்டூல், விஷம், கத்தி, துப்பாக்கி, தூக்க மாத்திரை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட உள்ளது.