ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலிக்கு முழுக்கு போடுவதாக் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக முக்கிய தலைகள் தலைதூக்கி செய்த அராஜகங்கள் ஒருபுறம் என்றால், ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற பெயரில் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் செய்த அலப்பறைகள் தமிழக அரசியலில் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது.

குட்டி அம்மா என அழைக்கப்பட்ட தீபா தனது வீடு பால்கனியில் இருந்து கை அசைத்து அரசியல் செய்து கூட்டத்தை கூட்டி அலப்பறை செய்தது நினைவிருக்கலாம்.

அதிமுகவின் மீது கொண்ட அதிருப்தியால் புதிதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார் ஜெ தீபா. அதன் பின்னர் இடையில் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக ஜெ தீபா தெரிவித்தார் (தேர்தல் சமயத்தில்)

இந்நிலையில் அவர் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ஜெ தீபா தெரிவித்துள்ளது பின்வருமாறு, ‘எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. டிரைவர் ஒரு கண் என் கணவர் ஒரு கண். எனது குடும்பம்தான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக்கொண்டு கணவருடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.

எனக்கு அரசியலே வேண்டாம். என்னை தொலைப்பேசியில் அழைக்காதீர்கள். மீறி அழைத்தால் போலீஸில் புகார் அளிப்பேன். அதேபோல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் ‘ஜாயிண்ட் வெஞ்சரில்’ இணைத்து விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அதிமுகவில் இணையலாம்.

முழுமையாக பொது வாழக்கையில் இருந்து விலகுகிறேன். எனவே தீபா பேர்வை என்ற பெயரில் யாரும் என்னை தொந்தரவு செய்து கஷ்டப்படுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

அதிமுக பிரமுகர்கள் மிரட்டலால் தீபா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா போல் உருண்டை முகம் குண்டு தேகம் இருப்பவர்கள் எல்லாம் முதல் அமைச்சர் (ஜெயலலிதா) ஆக முடியாது என்று தெரிந்து கொண்டேன் என தீபா கதறி அழுததாக பரிதாபகரமான பேரவை தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.

பகிர்