‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் (கருமந்திரம் பிடித்த வழக்கம்போல) ஓய்வெடுப்பதற்காக ரஜினி இமயமலைக்கு பயணம் செல்லவிருப்பதாகவும் அங்கு அடுத்த பட ஷூட்டிங் தொடங்கும்வரை ஓய்வெடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.
காவல்துறைப் பின்னணியில் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி, நயன்தாரா கூட்டணியில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இதன் பெரும்பாலான காட்சிகளை மும்பையிலேயே படமாக்கிவிட்டது படக்குழு.
ப்ரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் ரஜினியின் லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
படக்குழு வெளியிட்டுள்ள தர்பார் பட போட்டோக்களில் ரஜினியின் ஸ்டைலைப் பார்த்து செம மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
படக்குழுவுக்கு தெரியாமல், அடிக்கடி சில கறுப்பு ஆடுகள் தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றன.
இதனிடையே சூர்யாவின் ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினி, ‘‘தர்பார் மாதிரி இன்னொரு படம் எனக்கு அமைந்துவிடக் கூடாது என்பதுபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தீயாக வேலை பார்க்கிறார்’ என்று பேசியிருந்தார்.
தற்போது மும்பையில் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையில் இறங்கிய ரஜினி அநேகமாக சன் பிக்சர்ஸுக்கு ஒரு படம் பண்ணுவார் என்றும் அதை ‘விஸ்வாசம்’சிவா இயக்குவார் என்றும் தெரிகிறது.
இந்த சன் பிக்சர்ஸ் படம் தொடங்கும் வரை வீட்டில் ஓய்வெடுத்தால் மீடியாக்களின் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி வருமே என்ற எண்ணத்தில் அதைத் தவிர்க்கும் பொருட்டு ரஜினி வழக்கம்போல் இமயமலையின் ஏதோ ஒரு ஏரியாவுக்குப் போய் ஓய்வெடுத்துவிட்டுத்தான் திரும்புவார் என்கிறார்கள்.
இதை அறிந்த நமது உங்கள் நியூஸ் கப்ஸா நிருபர் பாராச்சூட் மூலம் போயஸ் கார்டன் மொட்டை மாடியில் குதித்து ரப்பர் செருப்பு, லுங்கியில் பீடி பிடித்தபடி சாதாரண மனிதனாக ஒய்வு எடுத்துக்கொண்டிருந்த ரஜினியை ரகசிய பேட்டி எடுத்துள்ளார்.
அப்போது இருமிக்கொண்டே பேசிய கிழவன் ரஜினி, ஜெயலலிதா நேரடி வாரிசு தீபாவே அரசியலை விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடி ‘ஜகா’ வாங்கிட்டாங்க. நான் ஏன் அவசரப்படணும்? இன்னும் பத்து படத்தில் நடிச்சிட்டு அப்புறம் பார்த்துக்கலாம்” என்று பாட்சா படத்தில் ‘உள்ளே போ’ என கத்துவது போல ‘வெளியே போ’ என டயலாக் பேசி நடித்து காட்டினார்.
“ரஜினி ரசிகர்கள் எல்லாம் கிழ போல்ட் ஆளுங்க! மக்களே இனியும் அவரு அரசியலுக்கு வருவாரு நன்மை செய்வாரு என்று கனவு காண வேண்டாம்! நல்லதோ கெட்டதோ கமல் எடுத்த முடிவு அற்புதம்! ரஜினியை ரசியுங்கள் ஆனால இந்த அல்லக்கை முருகதாஸ் போன்ற குள்ளர்களை நம்பி காசை வீணாக்க வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுக்கிறார் கப்ஸா நிருபர்.