தற்போது, 26 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேநேரம், லாக்டவுன் தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்பு நோய் தொற்று இருந்தவர்களுக்கு நோய் பாதிப்பு அறிகுறி தெரிய 14 நாட்களாவது தேவைப்படும் என்பதால், தொடர்ந்து மக்கள் தங்கள் உடல்நிலையை கண்காணித்து வருவது முக்கியமானது. வெளியுலகத் தொடர்பை துண்டிப்பது மிகவும் அவசியம். முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி. ஆகியோருடன் சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதில், அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண்டார்.

கரோனா சிகிச்சைக்காக 24 மணிநேரமும் அரசு மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் போராடி பல உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் சூழலில் ‘மாஸ்க் கேட்ட மருத்துவர் ட்ரான்ஸ்ஃபர்’ என்ற தகவலால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான கண்டனக்குரல்கள் மீம்ஸ்களாகவும் பதிவுகளாகவும் கரோனா கிருமியைப் போலவே பரவிவருகிறது. ஆனால், இதுகுறித்து விசாரித்தபோதுதான் ட்ரான்ஸ்ஃபருக்கான உண்மையானக் காரணம் தெரிய ஆரம்பித்தது. டாக்டர் சந்திரசேகர் என்பவர் ஸ்டேன்லி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்படுவதாக கடந்த 2020 மார்ச்-24 ந்தேதியிட்ட அரசு ஸ்டேன்லி மருத்து வக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி (ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது கைநாட்டு பெற்றதாக சொன்னாரே அவரேதான்) கொடுத்த பணிமாறுதல் ஆணைதான் ‘வாட்ஸ்-அப்’பில் பரவி, மாஸ்க் கேட்ட மருத்துவரை பணிமாறுதல் செய்யலாமா? என்று கண்டனக்குரல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மருத்துவ வட்டாரத்தில் கப்சா நிருபர் விசாரித்தபோது, “அரசு ஸ்டேன்லி மருத்துவமனை ஹவுஸ் சர்ஜன் டாக்டர் ஒருவர் மாஸ்க் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டு சென்றது உண்மைதான். அதற்கு, விஜயபாஸ்கர் அவரிடம், ‘1 கோடி ரூபாய் தர்றேன். வெளியில் மாஸ்க் வாங்கிட்டு வந்து தரமுடியுமா?’ என்று கோபமாக கடிந்து கொண்டிருக்கிறார். மேலும், இந்த நேரத்தில் ஹவுஸ்சர்ஜன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நமக்குத்தான் கெட்டபெயர் வரும் என்று விஜயபாஸ்கர் சைலண்ட் ஆனதும் உண்மை. ஆனால், வாட்ஸ்-அப்புகளில் உலாவும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் டாக்டர் சந்திரசேகரின் டிரான்ஸ்ஃபர் என்பது மாஸ்க் காரணமல்ல. துறைரீதியான நடவடிக்கைதான்” என்று பின்னணியை விவரிக்க ஆரம்பித்தார்கள். “அதாவது, டாக்டர் சந்திரசேகர் பலவருடங்களாக அரசு ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார்.

ஊழலால் இந்திய மருத்துவத் துறையையே வாய் பிளக்க வைத்த கேதன் தேசாயின் தோழியும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கீதாலட்சுமியின் செல்லப்பிள்ளைதான் இந்த டாக்டர் சந்திரசேகர். டாக்டர் கீதாலட்சுமியின் ஆசீர்வாதத்தால் அரசு ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியின் வார்டனாகவும் பணியாற்றியுள்ளார். அப்போது, மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு மது அருந்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பின் தொடர ஆரம்பித்துவிட்டன. ஆனால், டாக்டர் சந்திரசேகர் இந்திய மருத்துவச்சங்கம், பொது அறுவைச் சிகிச்சை சங்கம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் என சங்கங்களில் போஸ்டிங் வாங்கி வைத்திருப்பதால் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஆனாலும் இவர் மீதான புகார்கள் குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. அந்த, தண்டனையிலிருந்து தப்பிக்க தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கரை அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார் டாக்டர் சந்திரசேகர்.

மேலும், அரசு விழாக்களில் கலந்துகொண்டு அமைச்சர் விஜயபாஸ்கருடன் இருக்கும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விசாரணைக் குழுவிடம் ’நான் யார் யார் தெரியுமா?’ என்கிற ரேஞ்சுக்கு பில்ட்-அப் செய்துவந்தார். உலக வங்கி கடனுதவியுடன் லீலா பேலஸ் ஹோட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில் தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்டம்-3 என்ற நிகழ்வு நடந்தது. இந்த, விழாவிலும் சுகாதாரத்துறை அமைச்சருடன் எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு பில்ட்-அப் செய்திருக்கிறார். கொரோனா சர்ச்சையால் டாக்டர் சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று பொறுமைகாத்த விசாரணைக் குழுவுக்கு மேலும் வெறுப்பேற்றியது போல இருந்தன டாக்டர் சந்திரசேகரின் நடவடிக்கைகள்.

இந்நிலையில்தான், கடந்த 2020 மார்ச்-24 ந்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பணிமாறுதல் ஆணையைக் கொடுத்தார் ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் பாலாஜி. இந்த ஆணைதான், வாட்ஸ்-அப்பில் பரவி மாஸ்க் கேட்டதால் சஸ்பெண்டா என்று அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக திரும்பிவிட்டது. வதந்தி தொடராமல் இருக்க, டாக்டர் சந்திரசேகரை பணிமாறுதல் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்” என்று சிரிக்கிறார்கள் மூத்த மருத்துவர்கள். கரோனா வைரஸ் பிரச்சினையில் ஸ்கோர் செய்து அடுத்த தேர்தலில் ஜெயித்து விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் விஜயபாஸ்கர், இந்த பின்னடைவைச் சமாளிக்க தனது சொந்தச் செலவில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய மாஸ்க் தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகிறார். விரைவில் விலையில்லா பொருட்களுடன் தமிழக ரேசன் கடைகளில் இந்த மாஸ்க் வினியோயகம் செய்யப்படும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு நமது கப்சா நிருபரை வெறுப்பேற்றினார்.

பகிர்