அரசியலுக்கு வருவேன்; ஆனால்….என்று சில நிபந்தனைகளை விதித்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘’2012ல் அரசியல் மாற்றம் இல்லை என்றால் வேறு எப்போதும் இருக்க வாய்ப்பே இல்லை. 54 ஆண்டுகளாக தமிழக அரசியலில் உள்ள திமுக, அதிமுக ஆட்சியை அகற்ற இதுதான் நல்ல சந்தர்ப்பம். மாற்று அரசியல் தேவை. கட்சி வேறு ஆட்சி வேறு. நான் அரசியலுக்கு வந்தால் முதலமைச்சர் பதவியில் அமரமாட்டேன்.
நான் கட்சி தலைவர் மட்டும்தான். முதல்வர் பதவிக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகளை அழைப்பேன். 50 வயதுக்கு கீழே உள்ள படித்தவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பேன். தேர்தலில் பணியாற்றத்தான் கட்சியில் ஆட்கள் அதிகம் தேவை. தேர்தல் முடிந்துவிட்டால் கட்சியில் இருப்போரின் எண்ணிக்கையை குறைத்துவிடுவேன்.
இளைஞர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அசுர பலத்தோடு உள்ள இரண்டு கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற வேண்டும். நல்ல மாற்றத்திற்காக மீண்டும் ஒரு புரட்சி தேவை. அதற்கு என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை எல்லாம் ஏற்றுக்கொண்டால் நான் வரத்தயார். இல்லை என்றால் நானும் அரசியலுக்கு வந்து, இத்தனை சதவிகிதம் அத்தனை சதவிகிதம் வாங்கி, ஓட்டை பிரிப்பதற்காக மட்டுமே வரமாட்டேன்.
எனக்கு 72 வயது ஆகிறது. உடலில் வேறு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. உயிர் பிழைத்தும் வந்திருக்கிறேன். இப்போது இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் சொல்லப்போகிறேன். அப்போது மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள். மாற்று அரசியலுக்காக தமிழக மக்கள் என் வருகையை ஆதரிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் இதை மக்களிடம் விளக்கி கூற வேண்டும்’’ என்று கூறினார்.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் துரைமுருகன் கூறினார். இந்நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் திமுகவினர் எப்படி வேண்டுமானாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு திமுக வெளிப்படையாக பதிலளிக்கவில்லை என பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திமுக இந்து விரோத கட்சி என்ற குற்றச்சாட்டு புதிதாகச் சொல்லப்படுவது இல்லை எனக் கூறியுள்ள பத்திரிகையாளர் கணபதி, தேர்தலில் இந்தக் குற்றச்சாட்டு எதிரொலிக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ள கப்சா நிருபர், சிலர் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வர முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனது மனைவியோ மகளோ மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் ரஜினி கூறினார். ராமதாஸ் இப்படி சொல்லிவிட்டு மகன் இளைஞைர் அணி மனைவி அனைத்து அறக்கட்டளைக்கும் நிர்வாகி அதுபோலத்தான் ரஜினி இருப்பார் என்று பேசப்படுகிறது. நடிகர் ரஜினியை வைத்து ஆதாயம் அடைவதற்காகவே சிலர் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் பத்திரிகையாளர் கப்சா நிருபர் கூறியுள்ளார்.